Monday, March 23, 2009

5 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்: வைகோ

இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர்.

இந்த துரோகத்திற்கு நாம் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா வைகோ தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார்.

பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு 10ஆயிரம் பணம் கொடுத்தார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பண உதவிகள் வரும் என வைகோ தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், இலங்கையில் வன்னிப் பகுதியில் ‘’ சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள இராணுவம்.

உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது.

இப்படிப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர்.

இந்த துரோகத்திற்கு நாம் நல்ல பாடம் புகட்டியே ஆகவேண்டும்’’ என்று வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்.காம்

1 comment:

LKritina said...

upon reading the comments of Vaiko, My blood is just boiling and my mind just turns to revenge the Traitor Indian Govt!!! World Tamils will just wait for the right time & place to bring the culprits to Justice !!! Please kindly note that I am a TN based world Tamillan. I am very cautious even in my dream to say that I am a Tamilan !!