Monday, December 28, 2009

தமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை?

தஞ்சாவூரில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் உலகத் தமிழர் பேரமை‌ப்பு நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை, அவர் வந்திறங்கிய திருச்சி விமான நிலையத்திலேயே தடுத்தி நிறுத்தி, அவர் எங்கிருந்து வந்தாரோ அதே நகருக்கு மீண்டும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர் நமது நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள்.

உரிய பயண ஆவணங்களுடன் வந்த சிவாஜிலிங்கத்தை எதற்காக நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்பதை தெரிவிக்காமலேயே குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்றி மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தியா மட்டுமல்ல, எந்த ஒரு நாட்டிற்கும் வரும் அன்னிய நாட்டினரை அவர்கள் முறையான பயண ஆவணங்களுடன் வந்துள்ளனரா என்பதை சோதித்து அனுமதிக்கும் பொறுப்பு குடியேற்றத் துறைக்கு உண்டு. அவ்வாறு வருபவர்கள், வந்திறங்கும் அந்த நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது பாதுகாப்புத் தொடர்பான வேறு காரணங்களுக்காகவே குடியேற்றத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுவதும், அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதும் பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட சட்டப் பூர்வமான நடவடிக்கையே.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், முறையான பயண ஆவணங்களுடன் (விசா) வந்திருந்தாலும், என்ன காரணத்திற்காக நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வாய்மொழியாக மட்டுமின்றி, எழுத்துப் பூர்வமாகவே தெரிவிக்க வேண்டும். வந்திறங்கிய பயணிக்கு தான் என்ன காரணத்தி்ற்காக திருப்பி அனுப்பப்படுகிறோம் என்பது சட்டப் பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையே.

ஏனெனில், நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத அந்தப் பயணி, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதுவாரானால், அவர் தனது நாட்டிற்குச் சென்று சட்ட ரீதியாக நியாயம் பெற அந்த எழுத்துப்பூர்வமான விளக்கம் அவசியமானதாகும்.

ஆனால், இலங்கையின் .நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கைத் தமிழர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுள் ஒருவர் போன்ற தகுதிகள் மட்டுமின்றி, அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் சிவாஜிலிங்கம். இப்படிப்பட்ட தகுதிகள் கொண்ட ஒரு அண்டை நாட்டின் அரசியல் தலைவரை விமான நிலையத்திலேயே தடுத்து வைத்தது மட்டுமின்றி, அவரை நாடு கடத்த என்ன காரணம் என்பதை அங்கிருந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அவருக்கு தெரிவிக்கவில்லை!

தான் புறப்பட்ட துபாய்க்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட சிவாஜிலிங்கம், கொழும்பு வந்தடைந்தபோது அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தும், இந்தியா வருவதற்கான விசா பெற்றிருந்தும், தன்னை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காதது தனக்கு எந்த விதத்திலும் அவமானமில்லை, அது இந்தியாவிற்குத்தான் அவமானம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல தான் எப்படி நடத்தப்பட்டேன் என்பதையும் சிவாஜிலிங்கம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. “விமான நிலையத்தை சென்றடைந்த எனக்கு அங்கு தண்ணீர் அருந்துவதற்கோ கழிவறையை பயன்படுத்துவதற்கோ கூட அனுமதி தரப்படவில்லை. தொலைபேசியல் எவரையும் அழைக்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. ஒருநாட்டின் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளன் நான். இவை எல்லாவற்றையும் விளக்கமளித்துக்கூட என்னை அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

தண்ணீர் குடிப்பதற்கும், கழிவறை செல்வதற்கும் கூட அனுமதியளிக்காததன் காரணமென்ன? இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் உலகில் எங்காவது நடந்துள்ளதா? தொலைபேசியில் கூட எவருடனும் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஒரு நாட்டிற்குள் வரும் (அந்நாட்டின்) அழையா விருந்தாளியாக இருந்தாலும், அவருடைய மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூட அனுமதி மறுப்பதற்கு என்ன அதிகாரம் உள்ளது?

எந்தக் காரணமும் சொல்லாமல் அன்னிய நாட்டவர் ஒருவரை - அதுவும் அவர் தமிழராக இருந்தால் - காரணம் கூறாமல் வெளியேற்றும் ‘சட்டப் பூர்வமான’ அதிகாரம் கொண்டது இந்தியாவின் குடியேற்றத் துறை என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய வானளவிய அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ள உரிமை படைத்த குடியேற்றத் துறையும், நாட்டை காக்க கண் துஞ்சாமல் பாதுகாத்துவரும் உள்துறை அமைச்சகத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள ‘காரணமின்றி வெளியேற்றும் அதிகாரம்’ இந்த ஜனநாயக நாட்டில் கேள்விக்குட்படுத்த முடியாதது என்பதும் விவரம் தெரிந்த அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் முறையான பயண ஆவணத்துடன் (விசா) வந்தவரை திருப்பி அனுப்புகிறீர்கள் என்றால் அதற்கான காரணத்தை அளிப்பதில் என்ன சிக்கல்? ஏன் தயக்கம்? சட்டப் பூர்வமான காரணம் இல்லை என்பதனாலா? அல்லது குடியேற்றத் துறையின் நடவடிக்கையின் பின்னால் உள்ள அரசியலா? என்ன காரணம் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு விளக்கிட வேண்டும்.


ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

இப்படிப்பட்ட அநீதிகள் ஈழத் தமிழர்களுக்குத்தான் அதிகம் இழைக்கப்படுகிறது. இது அனுபவப்பூர்வமாக நாமறிந்த உண்மை. சில மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த ஈழத் தமிழர் ஒருவரை - அவர் முறையான விசா பெற்று வந்த நிலையில் - ஒரு நாளெல்லாம் தடுத்து நிறுத்தி வைத்து - 16 மணி நேரத்திற்குப் பிறகு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார் சென்னை மீனம்பாக்கத்தில் பணியாற்றிய குடியேற்றத் துறை அதிகாரி.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் (அகதியாக) இந்தியா வந்திருந்தபோது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக அவர் தங்கியிருந்தார் என்றும், அதற்கான விதிப்படி இன்னும் ஓராண்டிற்கு அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது என்றும் அந்தக் குடியேற்றத் துறை அதிகாரி கூற, அதற்கு பதிலளித்த ஈழத் தமிழர், தான் இப்பிரச்சனையை உள் துறை அமைச்சகத்திற்கு விளக்கி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, அதனடிப்படையிலேயே விசாவிற்கு விண்ணப்பித்து அதனைப் பெற்று வந்துள்ளதாகவும் விளக்கியுள்ளார். ஆனால் அந்தக் குடியேற்ற அதிகாரியோ, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் விதிப்படிதான் நடந்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அந்த விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள் என்று அந்தப் பயணி கேட்டதற்கு, அவ்வாறு எதையும் அளிக்க மறுத்த அந்த அதிகாரி, இரவு 11 மணி வரை இருந்து, அந்தத் தமிழரையும் அவருடைய குடும்பத்தினரையும் மீண்டும் விமானத்தில் ஏற்றிய பின்னர் - மிகுந்த கடமையுணர்வோடு - தனது பணியை முடித்துக் கொண்டு சென்றுள்ளார்!

இதுகுறித்து விசாரித்துபோது, இப்படி பல ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்ற விவரங்கள் தெரிந்தது. ஏன்? தமிழர்களுக்கு எதிராக மட்டும் இப்படிப்பட்ட முறையற்ற அணுகுமுறை எதனால் கடைபிடிக்கப்படுகிறது? இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசின் இன அழித்தலில் இருந்து தப்பித்து, ஆறரைக் கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் தங்கள் தாய் மண் என்று உலகத் தமிழர்கள் கருதும் தங்கள் தொப்புள் கொடி உறவுகளோடு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை மேற்கொள்ள வந்த ஈழத் தமிழர்களை - இந்தியாவின் குடியேற்றத் துறை அவமானத்திற்குட்படுத்துவது ஏன்? மத்திய உள்துறை அமைச்சகம் விளக்க வேண்டும்.

பன்னாடுச் சட்டங்களுக்கு இணங்க - அவர்கள் அகதிகளானாலும் அனைத்து மனித உரிமைகளுடனும் வாழ, பயணிக்க ஈழத் தமிழர்களுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமைகளை தங்களுக்கு (நாட்டின் பாதுகாப்பை உத்தேசித்து) வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறை தவறிப் பயன்படுத்தி தமிழர்களையும், அவர்தம் தலைவர்களையும் அவமதிப்பதையும், குடியேற்றச் சட்டத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதையும் மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் சட்டப் பூர்வமான அதிகாரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதும் அந்ந நாட்டில் நிலவும் ஜனநாயகத்திற்கு ஒரு அளவுகோல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

Monday, December 14, 2009

எஸ்.எம்.கிருஷ்ணா கருத்து இரக்கமற்றது: ஜெயலலிதா

சென்னை, டிச. 14: கச்சத் தீவு பிரச்னையில் உண்மை நிலை தெரியாமல் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்த கருத்து இரக்கமற்றது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"இந்திய அரசைப் பொருத்தவரையில் கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது' என நாடாளுமன்றத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியிருக்கிறார். இது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள கச்சத் தீவு ராமநாதபுரம் மன்னரின் சொத்தாக (சர்வே எண்: 1250) இருந்தது. வறண்ட கச்சத் தீவை வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும், பிடிபட்ட மீன்களை இனவாரியாக வகைப்படுத்தவும் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பரம்பரையாகப் பயன்படுத்தி வந்தனர்.

இந்தத் தீவில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் கட்டிய அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு மார்ச் இறுதியில் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் வட இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்பது வழக்கம்.

இது போன்ற காலங்களில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மத குரு செல்வார் என்று வரலாற்றுப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் கச்சத் தீவு மீது இந்தியாவுக்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்குச் சான்றாக விளங்குகின்றன. ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறான கருத்தை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

"பாம்பனுக்கு கிழக்கே 18 மைல் தொலைவில் கச்சத் தீவு உள்ளது. பாம்பன் எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. கச்சத் தீவின் நிலைப்பாடும் தெரியாது" என்று நேரு பிரதமராக இருந்தபோது மாநிலங்களவையில் கூறியிருக்கிறார்.

"முக்கியத்துவம் இல்லாத வெறும் கற்பாறைதான் கச்சத் தீவு" என்று இந்திரா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு சொந்தம் என நினைத்திருந்த கச்சத் தீவு ஒரே நாள் இரவில் வேறொரு நாட்டுக்கு சொந்தமாகிவிட்டதை அறிந்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள். இந்த முடிவு எடுக்கும்போது, தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை கருத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை.

அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அதைத் தடுக்கத் தவறிவிட்டார்.

கச்சத் தீவு தொடர்பாக 28.6.1974}ல் இந்திய}இலங்கை அரசுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதில், "இதுவரை கச்சத் தீவுக்கு வந்து கொண்டிருந்த மீனவர்களும், புனிதப் பயணிகளும், இனியும் அதே காரணத்துக்காக வந்து செல்லும்போது, பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டும் என இலங்கை கோராது" எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், "கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; வலைகளை உலர்த்த கச்சத் தீவைப் பயன்படுத்தலாம்" என்று அப்போதைய வெளியுறவு அமைச்சர் சர்தார் ஸ்வரண் சிங் தெரிவித்துள்ளார்.

எனினும், கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்த 600 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதிலிருந்து, ஸ்வரண் சிங்கின் கருத்தை இலங்கை அரசு ஒப்புக்கொள்ளாதது போல் தெரிகிறது.

இப்போது, "தமிழக மீனவர்கள் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்க விரும்பினால், இயல்பாகவே இலங்கையுடன் நாம் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்" என்று கிருஷ்ணா சொல்வதிலிருந்து, தமிழக மீனவர்கள் குறித்த தனது அறியாமையையும், அவர்களின் மீதுள்ள அவமதிப்பையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

கிருஷ்ணா, இலங்கையுடன் எத்தகைய உடன்படிக்கையை, எப்போது ஏற்படுத்தப் போகிறார்? அதற்கு முன், இன்னும் எத்தனை தமிழக மீனவர்கள் உயிரிழக்க வேண்டும்? தமிழக முதல்வர் கருணாநிதி, மீனவர்களுக்கு எதையும் செய்ய ஏன் மறுக்கிறார்?

கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டது தவறு மட்டுமல்ல; சட்டப்படியான பிழை என்று அ.தி.மு.க. கருதுகிறது. எனவேதான் கச்சத் தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமானால், கச்சத் தீவை மீட்டாக வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 15.12.2009

Wednesday, June 3, 2009

தமிழறிஞர் இரா.திருமுருகனார் இயற்கை எய்தினார்

இறப்பு அறிவிப்பு


தமிழறிஞர், முதுபெரும்புலவர்,
இலக்கணச்சுடர், இசைவாணர், முனைவர்


இரா திருமுருகனார்


அவர்கள் இன்று 03.06.2009 அறிவன் (புதன்) கிழமை
அதிகாலை 1.00 மணியளவில் இயற்கை எய்தினார்,
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தி. யமுனா (மனைவி)
தி.அறவாழி (மகன்)
அ.இரேணுகா அறவாழி (மருமகள்)
அ.செம்மல் (பெயரன்)
அ.தென்றல் கார்த்திக் (பெயர்த்தி)

Friday, May 29, 2009

ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்த‌ியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது: பழ.நெடுமாற‌ன் கண்டனம்; வைகோவும் குற்றச்சாட்டு

''ஐ.நா. சபை ம‌னித உ‌ரிமை‌க்குழு‌வி‌ல் இல‌ங்கை அரசு‌க்கு எ‌திராக கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு இ‌ந்‌தியா ஆதரவு அ‌ளி‌த்தது த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்‌தியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது'' எ‌ன்று இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் கு‌ற்ற‌ம்சா‌ட்டியு‌ள்ளா‌ர்

இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''இல‌ங்கை‌யி‌ல் ஒரு இல‌ட்ச‌த்து‌க்கு மே‌ற்ப‌ட்ட அ‌ப்பா‌வி த‌மி‌ழ் ம‌க்க‌ள் ‌சி‌ங்க இராணுவ‌த்‌தினரா‌ல் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு கொலை‌க்கு ஆளா‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌‌க்‌கிறா‌ர்க‌ள். 3 இல‌ட்ச‌த்‌தி‌ற்கு மே‌ற்ப‌ட்ட ம‌க்க‌ளி‌ன் ‌வீடுக‌ள் கு‌ண்டு ‌வீ‌ச்‌சினா‌ல் அடியோடு தக‌ர்‌க்க‌ப்ப‌ட்டு, சொ‌ந்த ம‌ண்‌ணிலேயே அக‌திகளாக‌ ஆ‌க்கப்ப‌ட்டு இராணுவ முகா‌ம்க‌ளி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு தொட‌ர்‌ந்து ‌சி‌த்திரவதை செ‌ய்ய‌‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

25,000-க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌மிழ‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்து மரு‌த்துவ வச‌தி இ‌ல்லாம‌ல் இற‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். சமாதான‌ம் பேச வருமாறு இராணுவ‌த்‌தினரா‌ல் அழை‌க்க‌ப்ப‌ட்டு வெ‌ள்ளை‌க்கொடி ஏ‌ந்‌தி வ‌ந்த ‌விடுதலை‌ப்பு‌லிக‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள் நடேச‌ன், பு‌லி‌த்தேவ‌ன் உ‌ள்பட அவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தினரு‌ம் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு இரு‌க்‌கிறா‌ர்க‌‌ள்.

இ‌வ்வாறு அ‌ப்ப‌ட்டமாக ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களை செ‌ய்த ராஜப‌க்சவை போ‌ர் கு‌ற்றவா‌ளியாக ‌விசா‌ரி‌க்க வே‌ண்டு‌ம் என அமெ‌ரி‌க்காவு‌ம், மே‌ற்கு நாடுகளு‌ம் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு எ‌திராக இ‌ந்‌‌தியா வா‌க்க‌ளி‌த்து அதை தோ‌ற்கடி‌த்‌திரு‌ப்பது த‌மிழ‌ர்களு‌க்கு பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இது வெ‌ந்த பு‌ண்‌ணி‌ல் வே‌ல் பா‌ய்‌ச்சுவதாக உ‌ள்ளது

இல‌ங்கை‌க்கு ‌மிக அரு‌கி‌ல் இரு‌க்க‌க்கூடிய ஒரே நாடான இ‌‌ந்‌தியாவு‌க்கு இ‌ந்த உ‌ண்மைக‌ள் தெ‌ரியாம‌ல் இரு‌க்க முடியாது. எ‌‌ல்லா உ‌ண்மைக‌ளு‌ம் தெ‌ரி‌ந்து‌ம் மனசா‌ட்‌சி‌க்கு எ‌‌திராக இ‌ந்‌தியா ‌சி‌ங்கள வெ‌றி அரசு‌க்கு ஆதரவாக செய‌ல்ப‌ட்டிரு‌ப்பதை த‌மி‌ழ்‌ச் சமுதாய‌ம் ஒருபோது‌ம் ம‌‌ன்‌னி‌க்காது.

த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்‌தியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது. போ‌ர் கு‌ற்ற‌ம் பு‌ரி‌ந்த ராஜப‌‌க்சவை பாதுகா‌‌ப்ப‌தி‌ன் மூல‌ம் அ‌ந்த கு‌ற்ற‌த்தி‌ற்கு இ‌ந்‌‌தியாவு‌ம் உட‌ந்தையாக இரு‌க்‌கிறது எ‌ன்பதை உலக‌ச் சமுதாய‌ம் உண‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இ‌ந்‌திய அர‌சி‌ன் இ‌ந்த போ‌க்கை நா‌ன் வ‌ன்மையாக க‌ண்டி‌க்‌கிறே‌ன்'' எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌‌தியா‌ ‌மீ‌ண்டு‌ம் தவறு செ‌ய்து‌ள்ளது : வைகோ

ஐ.நா.சபை‌யி‌ல் ந‌ட‌ந்த ஓ‌ட்டெடு‌ப்‌பி‌ல் இல‌‌ங்கை‌க்கு ஆதரவாக ஓ‌ட்டு போ‌ட்டு‌ள்ளத‌ன் மூல‌ம் இ‌ந்‌திய அரசு இ‌ப்போது ‌மீ‌ண்டு‌ம் ஒரு தவறை செ‌ய்து‌ள்ளது'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ட்டியு‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் இ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ பேசுகை‌யி‌ல், ஈழ‌த்‌தி‌‌ல் நடைபெ‌ற்ற துயர‌ங்களு‌க்கு இ‌ந்‌‌திய அரசுதா‌ன் காரண‌ம். துயர‌ம் ‌எ‌‌ன்றவுட‌ன் வேறு எதையு‌ம் க‌ற்பனை செ‌ய்து‌விட வே‌ண்டு‌ம். துயர‌ம் எ‌ன்று நா‌ன் சொ‌ன்னத‌ற்கு காரண‌ம் இல‌ங்கை த‌மிழ‌ர்களை கருவறு‌க்கு‌ம் இ‌ந்த செயலு‌க்கு இ‌ந்த அரசு துணை போகு‌ம்போது நா‌ம் எதுவு‌ம் செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பதை‌ தா‌ன் துயர‌ம் எ‌ன்றே‌ன்.

இ‌ந்‌திய ‌விடுதலை‌க்கு முத‌லி‌ல் போராடியது தெ‌ன்னாடுதா‌ன். அ‌ந்த ‌வீர ச‌ரி‌த்‌திர‌ம் இ‌ந்த ம‌ண்ணு‌க்கு உ‌ண்டு. அ‌ப்படி‌ப்ப‌ட்ட இ‌ந்த ம‌‌ண்‌ணி‌ல் இ‌ன்று த‌மி‌ழ் உண‌ர்வு அ‌ழி‌க்க‌ப்படு‌கிறது. ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் வரலா‌ற்‌றி‌ல் இது ஒரு ‌சி‌றிய இடைவெ‌ளி. நாடாளும‌ன்ற‌த்திி‌ல் எ‌ன் குர‌ல் ஒ‌லி‌க்கா ‌வி‌ட்டாலு‌ம் ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்தில்‌ல் எ‌ன் குர‌ல் ஓ‌ங்‌கி ஒ‌லி‌க்கு‌ம்.

இ‌ந்‌திய அரசு இ‌ப்போது ‌மீ‌ண்டு‌ம் ஒரு தவறு செ‌ய்து‌ள்ளது. ஐ.நா.சபை‌யி‌ல் ந‌ட‌ந்த ஓ‌ட்டெடு‌ப்‌பி‌ல் இல‌‌ங்கை‌க்கு ஆதரவாக இ‌ந்‌தியா ஓ‌ட்டு போ‌ட்டு‌ள்ளது. உல‌கி‌ல் யாரு‌க்கு‌ம் ஏ‌ற்படாத கொடுமை த‌மிழ‌ர்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு இது த‌ற்கா‌லிக வெ‌ற்‌றிதா‌ன். அதுவு‌ம் இ‌ந்‌தியா உத‌வி செ‌ய்து ஆயுத‌ங்களை, ‌வீர‌ர்களை அனு‌ப்‌பியதா‌ல் ‌கிடை‌த்த வெ‌ற்‌றி.

கட‌ந்த 5 மாத‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் ஒரு இல‌ட்ச‌த்து 45 ஆ‌யிர‌ம் த‌மிழ‌ர்க‌ள் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மூ‌ன்றரை இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் பாதுகா‌ப்பு இ‌ல்லாம‌ல் உ‌ள்ளன‌ர். இது இ‌ந்‌‌திய அர‌சி‌ன் துரோக‌ம். இ‌தி‌லிரு‌ந்து அவ‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌மீ‌ளுவா‌ர்க‌ள். எ‌ன்று வைகோ பே‌சினா‌ர்.
நன்றி: தமிழ்வின்.காம்

Tuesday, March 31, 2009

ஈழத்தமிழர் பிரச்சினையில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் முதல்வர்: நெடுமாறன் கண்டனம்

ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியில் தமிழீழம் உருவானால் அதைப் பார்த்து என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த 50 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வருக்கு, இலங்கையின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களவர் என்பதும், 30 சதவீதமே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாதா?

ஈழத் தமிழரிடையே வாக்கெடுப்பு என்று கூறாமல் இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவது பிரச்சினையை வேண்டுமென்றே குழப்புவதாகும்.

1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ பிரச்சினை முன்வைக்கப்பட்டு மிகப்பெருவாரியான தமிழர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குப் பின் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் தமிழீழ ஆதரவு வேட்பாளர்களையே தமிழர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தமிழீழம் வேண்டும் என ஈழத்தமிழர்கள் தேர்தல் மூலம் பலமுறை தீர்ப்பளித்திருப்பதை ஏற்று அதற்கு அங்கீகாரம் தர இந்திய அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்த வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படும் கருணாநிதியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

Thursday, March 26, 2009

இலங்கைக்கு நாங்கள் செல்லத் தயார்: கருணாநிதிக்கு நெடுமாறன் சவால்

தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவ செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம். முதலமைச்சர் கருணாநிதி, அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! அந்த நாட்டின் அரச தலைவர் ராஜபக்சவை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்? நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பார்த்து களிக்கிறோம் கைதட்டி ஜெயகோசம் போடுகிறோம்" என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இப்போது இவ்வாறு கூறுபவர் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். யாழ். மக்களுக்கு உணவு அனுப்பாமல் சிங்கள அரசு பட்டினி போட்ட போது அந்த மக்களுக்கு உதவ 2007 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 12 ஆம் நாள் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து படகுகள் மூலம் உணவு - மருந்துப் பொருட்களை ஏற்றிச் செல்ல நாங்கள் முயன்ற போது எங்களுக்கு படகுகள் தரக்கூடாதென மீனவர்களை மிரட்டி, எங்களைப் போக விடாமல் தடுத்து கைது செய்தவர் இதே முதலமைச்சர் கருணாநிதி என்பதை அவருக்கு நினைவுப் படுத்துகிறேன்.

இவ்வளவுக்கும் நாங்கள் போர்ப் படைத் திரட்டிச் செல்லவில்லை. மனித நேயத்துடன் எங்கள் சகோதரத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லத்தான் முயன்றோம்.

அதையே தடுத்தவர், இப்போது படகுகளில் ஏறி நாங்கள் செல்வதற்கு குறுக்கே நிற்கப் போவதில்லை என அவர் கூறுவது உண்மையாக இருந்தால் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவம் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்த பல்கலைக்கழகத்தின் ஒரு அரங்கில் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் அவரை நோக்கி செருப்பை வீசி “இது ஒரு மோசடி’ என்று கத்தினார். “இந்த சர்வாதிகாரி இங்கே பொய்கள் சொல்லிக் கொண்டிருப்பதை எப்படி கேட்டுக் கொண்டிருக்க முடியும்” என்று அந்த இளைஞர் தெரிவித்தார். ...

விரிவு...