Thursday, December 13, 2007

தமிழர் நிலத்தை சூரையாடும் தமிழின எதிரிகள்...

தமிழினத்தின் எதிரிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டிற்கு வெளியில் உள்ள தமிழின எதிரிகள். தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிரிகள். வெளியில் உள்ள எதிரிகளை தமிழர்கள் இனங்கண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிரிகளை தமிழர்கள் முழுமையாக இனங்கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வியப்பு.



தமிழரல்லாதோர் தன்னை "நான் தமிழன்! நான் தமிழன்!!" என்று வெற்று முழக்கமிட்டுக்கொண்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அடிவருடியாக இருந்துகொண்டோ அல்லது தமிழர்களின் எழுச்சியால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைமையை கைப்பற்றியோ தமிழர்களுக்கு தொடர்ந்து இரண்டகம் செய்து வருகிறன்றர்.



இன்றைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டின் அதிகாரத்தில் உள்ள தமிழின எதிரிகள் தமிழினத்திற்கு எஞ்சியுள்ள இந்த மண்ணின் மீதுள்ள உரிமையையும் பறிக்கின்ற சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இன்றைக்கு வளர்ச்சி என்ற பெயரால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடமிருந்து கைப்பற்றி சிறப்புப் பொருளாதார மண்டலம், மின்நிலையங்கள், விமான நிலைய விரிவாக்கம், துணை நகரத்திட்டங்கள் என்ற பெயரில் தமிழ்மண் தமிழரல்லாதோருக்கு கூறுபோட்டு விற்கப்படுகிறது.



பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் போராட்டத்தின் காரணமாக இந்த நிலக் கொள்ளை தற்காலிகமாக ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

No comments: