Thursday, April 10, 2008

சிறிலங்காவுக்கு 10 ஆயிரம் ஏவுகணைகள் விற்பனை: ஸ்லோவோக்கியாவுக்கு ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்பு

சிறிலங்காவுக்கு 10,000 இராணுவ ஏவுகணைகளை ஸ்லோவோக்கியா விற்பனை செய்துள்ளதாக "உலகப் பாதுகாப்பு" அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஸ்லோவோக்கியாவின் இந்த செயற்பாடானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் என்றும் அந்த அமைப்பு சாடியுள்ளது.

25 ஆண்டுகளாக போர் நடந்து வரும் இலங்கையில் இந்த ஆயுதங்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் அது கவலை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய அபாயகரமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நடத்தை விதிமுறைகள் தடை செய்திருக்கின்றன என்று அந்த அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழுத் தலைவர் றோய் ஸ்பிஸ்டெர் தெரிவித்துள்ளார்.
"எங்கு மனித உரிமை மீறல்கள் எங்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதோ" அல்லது " எங்கு பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்திருக்கிறதோ" அப்பகுதிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அந்த நடத்தை விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இன மோதல்களில் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களால் சில நேரங்களில் பொதுமக்கள் "பாரபட்சமின்றி" பாதிக்கப்படுகின்றனர் என்று அறிக்கைகள் வெளியாகியிருப்பதையும் றோய் ஸ்பிஸ்டெர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"சிறிலங்கா அரசாங்கமானது போர் நடைபெறும் பகுதிகளுக்கு பெரும்பாலான சுயாதீன கண்காணிப்பாளர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதால் முழு உண்மை அறிய முடியாமல் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் வெளி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பெனிட்டா பெரிர்ரோவின் பேச்சாளர் கிறிஸ்டினா ஹோக்மான், ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடும் எப்படி நடத்தை விதிமுறைகளை செயற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விற்பனை தொடர்பிலான நடத்தை விதிகளை மீறவில்லை என்று ஸ்லோவோக்கிய பொருண்மிய அமைச்சு கூறியுள்ளது.

நன்றி: புதினம்.காம்

No comments: