Friday, January 18, 2008

புதுச்சேரியில் தமிழின உணர்வோடு தமிழர் திருநாள்..

இராயன் கலைக்கூடம், அரியாங்குப்பம், புதுச்சேரி.

கடந்த மூன்றாண்டுகளாக இராயன் கலைக்கூடத்தின் சார்பாக திருவள்ளுவர் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் உலகத்தமிழர் பேரமைப்பின் கொடியேற்றி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இராயன் கலைக்கூடத்தின் தலைவர் சீ.சந்திரசேகரன், பொதுச்செயலாளர் சீத்தா.பிரபாகரன், துணைச் செயலாளர் இரா.முருகதாசு, பொருளாளர் ஆ.இரம்யா மற்றும் ஆ.ஆனந்தன், விசயபாசுகரன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.


அரியாங்குப்பம் தமிழிளைஞர் நற்பணி மன்றம், அரியாங்குப்பம், புதுச்சேரி.

அரியாங்குப்பம் தமிழிளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாகவும் இந்த ஆண்டு முதல் திருவள்ளுவர் நாள் சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தமிழர் குறியீடுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டன. மேலும் மூன்று இடங்களில் திருவள்ளுவர் படம் வைத்து மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பின் கொடி வைக்கப்பட்டது.

மேலும் தமிழ் தமிழர் தொடர்பான ஆய்வுமுடிவுகள் தமிழர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்து பெருஞ்சித்திரனார் அவர்களின் கருத்துரைகள் துண்டறிக்கையாக அச்சடித்து அரியாங்குப்பம் பகுதி மக்களிடம் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்றத்தின் கருத்துரைஞர் ஆசிரியர் இரா.அருணகிரி, சிறப்புத்தலைவர் மு.அம்பலநாதன், தலைவர் இ.செந்தில், செயலர் சு.சக்திவேல், துணைத் தலைவர் ப.சு.சக்திவேல், துணைச் செயலர் இராசகுமார், பொருளாளர் தி.மோகன்தாசு, செயற்குழு உறுப்பினர்கள் சீத்தா.பிரபாகரன், வினாயகமூர்த்தி, சீ.சந்திரசேகரன், சரவணன், அறிவழகன், ஆ.ஆனந்தன், விசயபாசுகரன் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்

1 comment:

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம்.
தங்கள் பக்கம் கண்டு மகிழ்ந்தேன்.
அரியாங்குப்பம் தமிழ் உணர்வாளர்கள்
நிறைந்த ஊர்.தமிழர்விழா எடுத்தமை
பாராட்டிற்கு உரியது.
மு..இளங்கோவன்