Saturday, February 2, 2008

என் உறவே
உன் இன்னல்கண்டு
என்னால் அழமட்டுமே
முடியும்...

ஒரு அடிமையிடம்
இதைத்தவிர
வேறெதுவும்
எதிர்பார்த்து
ஏமாறாதே...

உன் இலக்கு
உன் நெஞ்சுரத்தில்
கூர்மையடைந்திருப்பதையும்
நீ அடையும்
தூரத்திலேயே
அது இருப்பதையும்
நானறிவேன்...

முன்னேறு...

உன் மகிழ்ச்சியிலும்
என்னால் பங்கெடுக்க
முடியாது...

அடிமை
மகிழ்ச்சியோடு
இருப்பதை
எந்த முதலாளியும்
விரும்பமாட்டான்...

அனைத்திற்கும்
என்னால்
கண்ணீர்சிந்த மட்டுமே
முடியும்...

கங்காணி
பார்த்துவிடப்போகிறான்...

தமிழ்நாடன்

No comments: