Saturday, June 7, 2008

சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழக அரசு விருது! தமிழக அரசு "டாஸ்மார்க்கில் சரக்கு வித்து பணத்தை சேர்ப்பது இதற்குத்தானா?”

சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழக அரசு விருது! தமிழக அரசு "டாஸ்மார்க்கில் சரக்கு வித்து பணத்தை சேர்ப்பது இதற்குத்தானா?”

கடந்த 2006-ஆம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

விருதிற்கான சின்னத்திரை தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து, விடுதலை, வசந்த், கண்மணி சுப்பு, டி.வி.சங்கர், இராஜசேகர், செய்தித்துறை செயலாள, இயக்குநர், துணை இயக்குநர் என அரசு குழு அமைத்து விருதிற்குரியவர்களை தேர்ந்தெடுத்தது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 (1 பவுன் தங்கம் சுமார் ரூ.10,000 5 பவுன் ரூ.50,000 ஆன அறிவிக்கப்பட்ட 17 கலைஞர்களுக்கும் சேர்த்து ஆக மொத்தம் ரூ.8,50,000) பவுனில் தங்கப் பதக்கமும் நினைவுப் பரிசும் நாள் குறித்தப்பின் தமிழக முதல்வர் வழங்குவார் என அரசு அறிவித்துள்ளது. மிகக் மகிழ்ச்சி...

எங்களைப்போன்ற சாதாரண அறிவு படைத்த மக்களுக்கு கீழ்கண்ட சில ஐயங்கள் எழுகின்றன.

பகுதி-1

1. சின்னத்திரை தொடர்களால் தமிழ்நாட்டில் என்னென்ன நன்மைகள் நிகழ்ந்தன?
2. சின்னத்திரை கலைஞர்களின் சமூக பங்களிப்பு என்ன?
3. சின்னத்திரை என்றால் தொடர்கள் மட்டும்தானா? மற்ற நிகழ்ச்சிகளை கணக்கில் எடுத்துகொள்ளாதது ஏன்?
4. தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் எந்த அளவுகோலை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
5. 2006-ஆம் ஆண்டு சின்னத்திரை தொடர்களுக்கு 2008-ஆம் ஆண்டு பரிசு வழங்க வேண்டிய அவசிய தேவை என்ன?

பகுதி-2
1. நடுவர் குழுவினர் அனைவரும் 2006-ஆம் ஆண்டு முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சி தொடர்களையும் தவறாமல் பார்த்தார்களா? அல்லது குறுவட்டின் மூலம் நாள்கணக்கில் ஒன்றாக அமர்ந்து பார்த்தார்களா? அல்லது 2006-ஆம் ஆண்டு தொடங்கிய தொடர்களை பார்த்து முடிக்க 2008 சூன் மாதம் வரை ஆனதா?

2. நடுவர் குழுவில் உள்ள நீதிபதி மருதமுத்து அனைத்து தொடர்களையும் பார்த்தாரா? பார்த்தார் என்றால் எப்போது பார்த்தார்? நீதிமன்றத்திற்கு அவர் எப்போது சென்றார்?

3. நடுவர் குழுவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பணிகள் என்ன?

இந்த ஐயத்தைப் போக்க சின்னத்திரை அறிஞர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும் முயன்றால் மகிழ்ச்சி. ஆனால் அவர்களுக்கு நேரம் இருக்காது 2007-ஆம் ஆண்டு விருதிற்காக தொடர்களை இப்போதே பார்க்கத் தொடங்கினால்தான் 2009-ஆம் ஆண்டு அவர்களுக்கு விருது வழங்க முடியும்.

தமிழக அரசு தமிழர்களுக்கான அரசாக மாறுவது எப்போது?

No comments: