கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல் ஏன்?
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்
தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட மக்களினது குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமாகும்.
சாதாரணமாக குடிடிநீரில் லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் அளவுக்குத்தான் அளவுக்குத்தான் ஃபுளோரைடு இருக்க வேண்டும். அதனைவிட அதிகமாக இருந்தால் அந்த நீர், குடிப்பதற்கு உகந்தது இல்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 80 ஒன்றியங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் ஃபுளோரைடின் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது. அதாவது, ஒரு லீற்றர் நீருக்கு 8 மி.லி. முதல் 11 மி.லி. வரை இருக்கிறது. இந்த நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களை ஃபுளோரைசிஸ் தாக்குவது உறுதி. இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று நீராதாரம் வேண்டும். அதற்காகவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி - இவை, தமிழகத்தின் முதன்மையான நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்கள். ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு வறட்சிதான். மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே கட்டப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணை நீரிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 1980-களின் பிற்பகுதியில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்று நீரை வைத்து இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பது பற்றி யோசிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் நீராதாரம், காவிரி ஆறு. பிலிகுண்டுவில் இருந்து மேட்டூர் அணைக்குச் செல்லும் வழியில் ஒகேனக்கல் அருவிக்குச் சற்று மேலே சத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் மேலோட்ட நீரில் இருந்து இதற்கான தண்ணீர் எடுக்கப்படும்.
4 இயந்திரங்கள் மூலம் நிமிடத்திற்கு 1,18,000 லீற்றர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்தச் சுத்திகரிப்பு நிலையம், சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். பிறகு அங்கிருந்து மீண்டும் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு, இடைநிலை நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படும். பிறகு மறுபடி இயந்திரங்கள் மூலம் உந்தப்பட்டு 3.5 கி.மீ. தொலைவில் உள்ள மடம் என்ற மேடான இடத்தில் உள்ள பிரதான குடிநீர்த் தொட்டியை அடையும். சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தத் தொட்டியில் தேக்க முடியும்.
இந்தத் தொட்டியிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் (ஓசூர் தவிர) புவியீர்ப்பு விசை மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
ஓசூர் மற்றும் அதற்குச் செல்லும் வழியிலுள்ள பகுதிகள் மேடாக இருப்பதால் ஆங்காங்கே இடைநிலைத் தொட்டிகள் வைத்து, இயந்திரங்கள் மூலம் அத்தொட்டிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், விநியோகம், சுத்திகரிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.51.65 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் 85 சதவிகிதத்தைச் அனைத்துலக ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கி கடனாக வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் 90 லீற்றரும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 70 லீற்றரும் கிராமக் குடியிருப்புக்களில் வசிப்பவருக்கு 40 லீற்றரும் கிடைக்கும். இதன் மூலம் 30 லட்சம் பேர்கள் பயன் அடைவார்கள்.
இந்தத் திட்டத்தால் காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர், ஒகேனக்கலைக் கடந்து செல்கிறது. இதில் வெறும் 1.42 டி.எம்.சி. தண்ணீரே இந்தத் திட்டத்திற்காக எடுக்கப்படுகிறது.
திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2009 வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 இல் குடிநீர் விநியோகம் தொடங்கலாம் என்று குடிநீர் வாரியம் எதிர்பார்க்கிறது.
இத்திட்டத்துக்கு 1988 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய மத்திய அரசின் சுற்றுப் புறச் சூழல்- வனத்துறை- ஊரக வளர்ச்சித்துறை- நீர்வள ஆதாரத்துறை ஆகியவையும் 1988 ஆம் ஆண்டிலே அனுமதி அளித்தன. இந்நிலையில் கடந்த பெப்ரவரி 26 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டுக்குரிய தமிழ்நாட்டுப் பகுதிக்கு வந்தடைகின்ற காவிரி நீரிலிருந்து தமிழ்நாட்டின் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படுகிற திட்டம் இது.
பிரச்சினையைத் தூண்டிய கர்நாடகம்
ஆனால் இந்தத் திட்டத்திற்கும் எதற்குமே தொடர்பு இல்லாத கர்நாடகத்தின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான எடியூரப்பா கடந்த மார்ச் 16 ஆம் நாள் ஒகேனக்கல்லுக்குச் சென்று கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்றும் உரிமை கோரிவிட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மார்ச் 17 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் விளக்கக் கடிதம் அனுப்பினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய சிறிய கன்னட அமைப்பினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒகேனக்கல் தொடங்கி ஈரோடு, உதகமண்டலம் என பல பகுதிகளுக்கும் உரிமை கோரி அறிக்கைவிடுவதும் ஒகேனக்கல்லில் உள்ள கர்நாடகப் பகுதியில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன.
மேலும் இதன் உச்சகட்டமாக பெங்களுரில் உள்ள தமிழ்ச் சங்கம் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் பெங்களுரில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிட்ட திரை அரங்கங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான வாகனங்களும் அரசுப் பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் தமிழ்நாடு- கர்நாடகம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பெங்களுரில் உள்ள "தினத்தந்தி" நாளிதழின் அலுவலகமும் நாசமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27 ஆம் நாள் கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனைத்துக் கட்சி தமிழின உணர்வாளர்கள் திரண்டு சென்று கன்னடர்கள் நடத்தி வரும் வணிக வளாகங்கள்- கன்னட சங்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் செயற்படும் அனைத்து திரைப்படம் சார் சங்கங்களும் இணைந்து சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் உண்ணாநிகழ்வுப் போராட்டத்தை நடத்தினர்.
தமிழகத்தின் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோர் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டோரின் உரைகளில் தமிழ்த் தேசியத்தின் வீச்சு வெளிப்பட்டது.
இயக்குநர்கள் சேரன், சீமான், நடிகர்கள் ராஜ்கிரண், செந்தில் உரையைத் தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் ஆவேசமாக ஆணித்தரமாக வெளிப்படையாக தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார்.
நன்றி: புதினம்.காம்
Saturday, April 5, 2008
Tuesday, April 1, 2008
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: இந்தியப் பிரதமருக்கு பா.மக. நிறுவனர் இராமதாசு கடிதம்
எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை மருத்துவர் இராமதாஸ் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழர்களின் நியாயமான விருப்பங்களுக்கு இடமளிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. தமிழர்களை அடிமைப்படுத்துகிற, அழித்தொழிக்கிற திட்டத்தை மிகத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.
இந்தியாவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன ஒப்பந்தம் இப்போது உயிரற்றுப் போய்விட்டது. நோர்வே நாட்டின் அமைதி முயற்சியில் உருவான போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த 2002 ஆம் ஆண்டின் ரணில் விக்கிரமசிங்க - பிரபாகரன் ஒப்பந்தம், இலங்கை அரசால் இப்போது குப்பைக் கூடையில் போடப்பட்டுள்ளது.
இந்த வகையில் இலங்கை அரசு வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசாகிவிட்டது. அராஜக காட்டாட்சியாகி விட்டது. மனிதகுலத்துக்கே அது வெட்கக்கேடாகி விட்டது. தன் சொந்தத் தமிழ்க் குடிமக்களையே மிரட்டி நடுங்க வைக்கும் அரசாகி விட்டது.
இந்தப் போர்வெறி நோக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கிக் குவித்து வருகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்தான் இப்போது அந்நாட்டின் தூதுவராகக் கொழும்பில் இருக்கிறார். தன் போர்ப்படை நோக்கங்களுக்காக, இலங்கையில் காலூன்றுவதற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு நாடு சீனா. இலங்கைக்கு சீனாவின் ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் என்ற போர்வையில், இலங்கைக்கு ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும், இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சியையும் அமெரிக்கா அளித்து வருகிறது. இலங்கையின் இந்த ஆயுதத் தொகுப்புக்கு, இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி வருவதாக நாங்கள் அறிகிறோம்.
இந்த ஆயுதங்களை பயன்படுத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முழு மூச்சான போரை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இதன் இன்னொரு வெளிப்பாடாக, இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை குறிவைத்துத் தாக்கி கொன்று வருகிறது.
இந்தியா மட்டுமே அண்டை நாடு என்றிருக்கும் நிலையில், தேவையே இல்லாத நிலையில், சுப்பர் சொனிக் மிக் போர் விமானங்களை அண்மையில் இலங்கை வாங்கியிருப்பதாக அறிகிறோம்.
யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு, இப்போது ஏறக்குறைய தமிழ் மக்களே இல்லாத வெற்றிடம் ஆக்கப்பட்டுவிட்டது. கருகிய மனித உடல்கள், எரிக்கப்பட்ட பயிர்கள், தாவரங்கள், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், குண்டுகள் விழுந்ததால் ஏற்பட்ட குழிகள், இடிபாடுகள், சாலைப் பள்ளங்கள் ஆகியவைதான், 5 ஆயிரம் ஆண்டுக் கால தமிழ் மொழி, பண்பாட்டின் சின்னமாக விளங்கிய யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இன்று எஞ்சியிருப்பவை. இது ஓர் எடுத்துக்காட்டுதான்.
தங்களின் இயற்கையான, மரபான சூழலில் தமிழ் மக்கள் செழித்து வாழ்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகியவையும் இப்போது சாவும், அழிவும் மிகுந்த பகுதிகளாகிவிட்டன.
8 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் இலங்கையில் இருந்து வந்த ஒரு லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர்.
இலங்கை அரசின் தூண்டுதலால், அரசியல் உள்நோக்கத்துடன் மனித உரிமைகளை மீறி வருவோர், தொடர்ந்து கொலைகள் செய்வதிலும், ஆட்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியை விரும்பும் அரசியல்வாதிகளைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரை அவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். வெள்ளை நிற வான் ஆட்கடத்தல் என்று அழைக்கப்படும் ஆட்கடத்தல்கள் அரசின் உயர் தலைவர்களின் தூண்டுதலால் நடைபெறுகின்றன.
இனச் சிக்கல் என்ற அரசியல் சிக்கலுக்குப் போர்ப்படை மூலம் தீர்வுகாண முயலும் இலங்கை அரசின் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் ஆகும். தமிழர்களின் தாயகமான 20 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை கைப்பற்ற வேண்டும், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அழிக்க வேண்டும், தமிழர்களை எவரேனும் எஞ்சியிருந்தால் அவர்களை அடிமைப்படுத்த வேண்டும், இலங்கைத் தீவு முழுவதையுமே சிங்களப் பெளத்தர்களின் நாடாக்க வேண்டும் என்பனவே இலங்கை அரசின் கொள்கைத்திட்டங்கள் ஆகும்.
இந்தியாவில் உள்ள 6 கோடி தமிழர்கள், பாக்கு நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் அப்பால், தங்கள் சொந்த சகோதரர்களும், சகோதரிகளும் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு, பொறுத்திருக்க முடியாது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த கடலின் இருபுறத்திலும் வாழும் தமிழர்களுக்கு இடையிலான அன்பும், பாசமும், ஆதரவும் மிகவும் வலுவானவை, ஆழமாக வேரோடியவை.
அன்புள்ள பிரதமர் அவர்களே, எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். வரலாற்றில் அவர்கள் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் வேளையில், அவர்களைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இப்போதே இந்தியா செயலாற்ற வேண்டும். போர் வெறியை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். பேச்சுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு மீண்டும் தொடங்கச் செய்ய வேண்டும். பேச்சு நடைமுறைகளுக்கு ஏதேனும் பங்காற்றும்போது, தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை இந்திய அரசு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அக்டிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை மருத்துவர் இராமதாஸ் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழர்களின் நியாயமான விருப்பங்களுக்கு இடமளிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. தமிழர்களை அடிமைப்படுத்துகிற, அழித்தொழிக்கிற திட்டத்தை மிகத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.
இந்தியாவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன ஒப்பந்தம் இப்போது உயிரற்றுப் போய்விட்டது. நோர்வே நாட்டின் அமைதி முயற்சியில் உருவான போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த 2002 ஆம் ஆண்டின் ரணில் விக்கிரமசிங்க - பிரபாகரன் ஒப்பந்தம், இலங்கை அரசால் இப்போது குப்பைக் கூடையில் போடப்பட்டுள்ளது.
இந்த வகையில் இலங்கை அரசு வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசாகிவிட்டது. அராஜக காட்டாட்சியாகி விட்டது. மனிதகுலத்துக்கே அது வெட்கக்கேடாகி விட்டது. தன் சொந்தத் தமிழ்க் குடிமக்களையே மிரட்டி நடுங்க வைக்கும் அரசாகி விட்டது.
இந்தப் போர்வெறி நோக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கிக் குவித்து வருகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்தான் இப்போது அந்நாட்டின் தூதுவராகக் கொழும்பில் இருக்கிறார். தன் போர்ப்படை நோக்கங்களுக்காக, இலங்கையில் காலூன்றுவதற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு நாடு சீனா. இலங்கைக்கு சீனாவின் ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் என்ற போர்வையில், இலங்கைக்கு ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும், இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சியையும் அமெரிக்கா அளித்து வருகிறது. இலங்கையின் இந்த ஆயுதத் தொகுப்புக்கு, இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி வருவதாக நாங்கள் அறிகிறோம்.
இந்த ஆயுதங்களை பயன்படுத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முழு மூச்சான போரை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இதன் இன்னொரு வெளிப்பாடாக, இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை குறிவைத்துத் தாக்கி கொன்று வருகிறது.
இந்தியா மட்டுமே அண்டை நாடு என்றிருக்கும் நிலையில், தேவையே இல்லாத நிலையில், சுப்பர் சொனிக் மிக் போர் விமானங்களை அண்மையில் இலங்கை வாங்கியிருப்பதாக அறிகிறோம்.
யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு, இப்போது ஏறக்குறைய தமிழ் மக்களே இல்லாத வெற்றிடம் ஆக்கப்பட்டுவிட்டது. கருகிய மனித உடல்கள், எரிக்கப்பட்ட பயிர்கள், தாவரங்கள், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், குண்டுகள் விழுந்ததால் ஏற்பட்ட குழிகள், இடிபாடுகள், சாலைப் பள்ளங்கள் ஆகியவைதான், 5 ஆயிரம் ஆண்டுக் கால தமிழ் மொழி, பண்பாட்டின் சின்னமாக விளங்கிய யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இன்று எஞ்சியிருப்பவை. இது ஓர் எடுத்துக்காட்டுதான்.
தங்களின் இயற்கையான, மரபான சூழலில் தமிழ் மக்கள் செழித்து வாழ்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகியவையும் இப்போது சாவும், அழிவும் மிகுந்த பகுதிகளாகிவிட்டன.
8 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் இலங்கையில் இருந்து வந்த ஒரு லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர்.
இலங்கை அரசின் தூண்டுதலால், அரசியல் உள்நோக்கத்துடன் மனித உரிமைகளை மீறி வருவோர், தொடர்ந்து கொலைகள் செய்வதிலும், ஆட்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியை விரும்பும் அரசியல்வாதிகளைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரை அவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். வெள்ளை நிற வான் ஆட்கடத்தல் என்று அழைக்கப்படும் ஆட்கடத்தல்கள் அரசின் உயர் தலைவர்களின் தூண்டுதலால் நடைபெறுகின்றன.
இனச் சிக்கல் என்ற அரசியல் சிக்கலுக்குப் போர்ப்படை மூலம் தீர்வுகாண முயலும் இலங்கை அரசின் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் ஆகும். தமிழர்களின் தாயகமான 20 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை கைப்பற்ற வேண்டும், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அழிக்க வேண்டும், தமிழர்களை எவரேனும் எஞ்சியிருந்தால் அவர்களை அடிமைப்படுத்த வேண்டும், இலங்கைத் தீவு முழுவதையுமே சிங்களப் பெளத்தர்களின் நாடாக்க வேண்டும் என்பனவே இலங்கை அரசின் கொள்கைத்திட்டங்கள் ஆகும்.
இந்தியாவில் உள்ள 6 கோடி தமிழர்கள், பாக்கு நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் அப்பால், தங்கள் சொந்த சகோதரர்களும், சகோதரிகளும் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு, பொறுத்திருக்க முடியாது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த கடலின் இருபுறத்திலும் வாழும் தமிழர்களுக்கு இடையிலான அன்பும், பாசமும், ஆதரவும் மிகவும் வலுவானவை, ஆழமாக வேரோடியவை.
அன்புள்ள பிரதமர் அவர்களே, எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். வரலாற்றில் அவர்கள் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் வேளையில், அவர்களைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இப்போதே இந்தியா செயலாற்ற வேண்டும். போர் வெறியை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். பேச்சுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு மீண்டும் தொடங்கச் செய்ய வேண்டும். பேச்சு நடைமுறைகளுக்கு ஏதேனும் பங்காற்றும்போது, தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை இந்திய அரசு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அக்டிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்
Friday, March 14, 2008
சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியை நிறுத்த வேண்டும்: "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்"

சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை உள்ளிடக்கிய "தமிழ்ப் பாதுகாப்பு" இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க பல்வேறு இயக்கத்தினருக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
சென்னையில் இன்று வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் இராமதாஸ், தலைவர் கோ.க.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இயக்குநர்கள் சீமான், தங்கர்பச்சான், தமிழர் தேசிய இயக்கத்தின் பிரதிநிதி பத்மநாபன், எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு இயக்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சிறிலங்காவுக்கு உதவும் இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டது.
அறிக்கை விபரம்:
கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இலங்கையில் தொடங்கிய இனப்பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. சபிக்கப்பட்ட இனமாக அங்கே தமிழினம் இனவெறியின் கோரமுகத்தை நாளாந்தமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இலங்கையில் தொடங்கிய இனப்பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. சபிக்கப்பட்ட இனமாக அங்கே தமிழினம் இனவெறியின் கோரமுகத்தை நாளாந்தமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
சுமார் 4 தலைமுறைகள் கல்வி இல்லாமல், வேலை வாய்ப்பு இல்லாமல் ஒரு பிரிவினர் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பிரிவினர் புலம்பெயர்ந்து நாடோடிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன்ர்.
உலகம் முழுவதும் இன, மொழி, மத உரிமைகளுக்காகப் போராடும் குழுக்களுக்கு ஆதரவு கரம் நீட்டுபவர்கள் கூட, ஈழத் தமிழர்ப் பிரச்சினையை ஏதோ தீண்டத் தகாத விசயமாகக் கருதி புறக்கணித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு ஒன்று, ஈழத் தமிழர்களுக்கு ஒன்று என இரட்டை அளவுகோல் முறையை அவர்கள் கடைப்பிடிப்பது ஒருபுறம் வியப்பாகவும் மறுபுறம் கசப்பாகவும் இருக்கிறது.
இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் மீதான மும்முனைத் தாக்குதலை இலங்கை இராணுவம் தீவிரமாக்கியுள்ளது. யுத்தத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நியதிகளைக் கூட காற்றில் பறக்கவிட்டு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சிறார் இல்லங்கள், குடியிருப்புக்கள் என குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த பாசிச நடவடிக்கைகளை உலகின் பல்வேறு நாடுகளும் கண்டித்து இலங்கை அரசுக்கு அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக எச்சரித்துள்ளனர்.
ஈழத் தமிழர்கள் வேறு நாட்டுக் குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் தமிழினத்தின் ஒரு அங்கம். இந்தியத் தமிழர்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்தவர்கள். அவர்களுக்கு ஒரு தீங்கு இழைக்கப்பட்டால் அது இங்குள்ள தமிழர்களின் உள்ளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும். இதனை யாராலும் மறைத்துவிட முடியாது.
அண்மைக்காலத்தில் இந்தியத் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பல செயல்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வுகாண வேண்டும் என்பது இங்குள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் இந்திய அரசின் நடவடிக்கைகள் தமிழர்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
நோர்வே நாட்டு அமைதித் தூதுவர்கள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தையில் இருந்து தன்னிச்சையாக விலகிக்கொண்ட இலங்கை அரசு, இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வைக்காண வேண்டும் என்ற வெறியுடன் ஈழத் தமிழர்கள் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அதற்கு உதவிடும் வகையில் எத்தகைய நடவடிக்கைகளிலும் இந்திய அரசு ஈடுபடக்கூடாது என்பது இங்குள்ள தமிழர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதற்கு இந்திய அரசே முன்முயற்சி எடுத்து செயல்பட வேண்டும்.
இந்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்குவதில் முழு மூச்சாக இறங்கியுள்ள இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது. ஆனால் அண்மைக்காலமாக இலங்கை இராணுவத்துக்கு அளித்து வரும் பயிற்சியும் சிறிய இராணுவ தளவாட உதவிகளும் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் இலங்கை அரசுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது. எனவே இலங்கை இராணுவத்துக்கு அளித்து வரும் பயிற்சியையும் உதவிகளையும் இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
பல்வேறு நாடுகளில் நடைபெறுவது போல் இலங்கையோ ஏதோ ஒரு யுத்தக் குழுவுக்கும் அரசு படைகளுக்கும் யுத்தம் நடைபெறவில்லை. இங்கே ஒரு இனம் தன்னுடைய அழிவைத் தடுப்பதற்காகக் களத்தில் நின்று போரிட்டுக் கொண்டிருக்கிறது.
அதை அடக்கி ஒடுக்கி, அந்த இனத்தையே இலங்கையின் வரைபடத்தில் இருந்து அகற்றிடும் முயற்சிகள் மூர்க்கத்தனமாக நடைபெற்று வருகின்றன. இதனை இந்திய அரசு உணர்ந்து தமிழ் இனத்தைக் காக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இலங்கையில் தமிழினம் அழிந்து போவதற்கு எந்த வகையில் துணையாக இருந்து விடக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் அணுகுமுறையும் நடவடிக்கைகளும் முற்றிலுமாக மாற வேண்டும்.
ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளைக் காத்திடும் வகையில் இந்திய அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இதில் தமிழக அரசின் பங்கு மிகவும் முக்கியமானது.
கடந்த காலங்களில் மாநில அரசு முன் நின்று மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள்தான், ஒட்டுமொத்த தமிழகமே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டுக் குரல் கொடுப்பதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, தமிழக அரசு மெத்தனம் காட்டாமல், இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க நடுவன் அரசிடம் தக்க விதத்தில் எடுத்துரைக்க வேண்டும்.
அதற்குத் தமிழக மக்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு துணை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.
இலங்கை இராணுவத்தின் கொட்டம் அவர்கள் நாட்டோடு நின்று விடவில்லை. முன்பெல்லாம் என்றோ ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் இன்று தாக்குதல் நடைபெறாமல் ஒருநாள் கூட விடிவதில்லை. அத்துடன் நிற்காமல் மீனவர்களைக் கடத்திச் சென்றும் துன்புறுத்துகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள்.
அந்தக் குடும்பங்கள் படும்பாடு சொல்லி மாளாது. இதற்கால்லாம் காரணம் இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததுதான். எனவே தமிழக மீனவர்களுக்கு ஆண்டாண்டு காலமாகச் சொந்தமாக இருந்த கச்சத்தீவை மீண்டும் மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இலங்கைக் கடற்படையின் இந்த அடாவடி செயல்கள், தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் இந்தியாவுக்கு சாவல் விடும் வகையில் உள்ளன.
இந்தியா தொடர்ந்து நிதானம் காப்பது அதனுடைய பெருமைக்கும் பலத்தும் இழுக்காவே முடியும். இந்த இடத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்தியாவுக்கும் இதர நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எந்த ஒரு பிரச்சினையிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலையை இலங்கை எடுத்ததில்லை என்பதை இந்திய அரசும் இலங்கைப் பிரச்சனையில் அரசுக்கு ஆலோசனை கூறி வரும் ஆலோசகர்களும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் இலங்கை அரசு செயல்பட்ட முறைகளைப் புரிந்து கொண்டாலே, நிகழ்காலத்தில் எந்த நிலைபாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்பது தெளிவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்றோர்:
*தமிழின விரோதப் போக்கைக் கடைபிடித்து வரும் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்
*தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மற்றும் ஈழத் தமிழர் ஆதரவு ஆகியவை தொடர்பில் தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முதற்கட்ட போராட்டங்களை நடத்தி அதன் பின்னர் சென்னையில் பாரிய அளவிலான போராட்டத்தை நடத்தலாம் என்பது தொடர்பிலும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த செயற்பாடுகளை எந்த அமைப்பின் பெயரில் முன்னெடுத்துச் செல்வது என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மருத்துவர் இராமதாசும் தொல். திருமாவளவனும் முன்னர் நடத்தி வந்த "தமிழ் பாதுகாப்பு" இயக்கத்தின் பெயரிலேயே தொடர்ந்தும் ஈழத் தமிழர் ஆதரவு செயற்பாடுகளை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்
Thursday, February 7, 2008
சிறிலங்காவுக்கான ஆயுத உதவியைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான ஆர்ப்பாட்டம்

சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்திய நாடாளுமன்றம் முன்பாக புதன்கிழமை அன்று (06.02.008) முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.
பேரணி நடைபெற்ற பகுதி எங்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தினது இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் பதாகைகளாக தொங்க விடப்பட்டிருந்தன.
இனப்படுகொலைக்குத் துணை போகாதே!
ஆயுத உதவி வழங்காதே!

இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.

இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து-
இனப்படுகொலைக்குத் துணை போகாதே!
ஆயுத உதவி வழங்காதே!
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தமிழ்- ஆங்கிலம்- இந்தி ஆகிய மும்மொழிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

பெருந்திரளாக அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.
சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துக: இந்திய அமைச்சரிடம் பெரியார் திராவிடர் கழகம் நேரில் வலியுறுத்தல்

சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று 10 லட்சம் தமிழ் மக்கள் கையெழுத்திட்ட படிவங்கள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் வியாழக்கிழமை அன்று (07.02.2008) நேரில் வழங்கப்பட்டது.

புதுடில்லியில் ஏ.கே.அந்தோணியின் இல்லத்தில் மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச் செயலாளர்களான விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன், பெரியார் தி.க. தலைமைக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சா.துரைசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏ.கே. அந்தோணியை சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்திய அரசு வழங்கக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் பல லட்சக்கணக்கானோர் கையெழுத்திட்ட படிவங்களும் ஏ.கே.அந்தோணியிடம் கையளிக்கப்பட்டது.
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுடில்லியில் நேற்று புதன்கிழமை இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான கண்டன ஆர்ப்பாட்டத்தையும் பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின் போது சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்திய அரசு வழங்கக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் பல லட்சக்கணக்கானோர் கையெழுத்திட்ட படிவங்களும் ஏ.கே.அந்தோணியிடம் கையளிக்கப்பட்டது.
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுடில்லியில் நேற்று புதன்கிழமை இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான கண்டன ஆர்ப்பாட்டத்தையும் பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Saturday, February 2, 2008
என் உறவே
உன் இன்னல்கண்டு
என்னால் அழமட்டுமே
முடியும்...
ஒரு அடிமையிடம்
இதைத்தவிர
வேறெதுவும்
எதிர்பார்த்து
ஏமாறாதே...
உன் இலக்கு
உன் நெஞ்சுரத்தில்
கூர்மையடைந்திருப்பதையும்
நீ அடையும்
தூரத்திலேயே
அது இருப்பதையும்
நானறிவேன்...
முன்னேறு...
உன் மகிழ்ச்சியிலும்
என்னால் பங்கெடுக்க
முடியாது...
அடிமை
மகிழ்ச்சியோடு
இருப்பதை
எந்த முதலாளியும்
விரும்பமாட்டான்...
அனைத்திற்கும்
என்னால்
கண்ணீர்சிந்த மட்டுமே
முடியும்...
கங்காணி
பார்த்துவிடப்போகிறான்...
தமிழ்நாடன்
உன் இன்னல்கண்டு
என்னால் அழமட்டுமே
முடியும்...
ஒரு அடிமையிடம்
இதைத்தவிர
வேறெதுவும்
எதிர்பார்த்து
ஏமாறாதே...
உன் இலக்கு
உன் நெஞ்சுரத்தில்
கூர்மையடைந்திருப்பதையும்
நீ அடையும்
தூரத்திலேயே
அது இருப்பதையும்
நானறிவேன்...
முன்னேறு...
உன் மகிழ்ச்சியிலும்
என்னால் பங்கெடுக்க
முடியாது...
அடிமை
மகிழ்ச்சியோடு
இருப்பதை
எந்த முதலாளியும்
விரும்பமாட்டான்...
அனைத்திற்கும்
என்னால்
கண்ணீர்சிந்த மட்டுமே
முடியும்...
கங்காணி
பார்த்துவிடப்போகிறான்...
தமிழ்நாடன்
புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து தமிழக மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்: தொல்.திருமாவளவன்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கச்சத்தீவு கடற்பரப்பில் கண்ணிவெடி புதைப்பு மற்றும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு ஆகியவற்றுக்காக சிறிலங்கா அரசு மீது இந்திய அரசு போர் தொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
சிறிலங்காவைக் கண்டித்து முழக்கங்களை திருமாவளவன் எழுப்ப திரண்டிருந்தோரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது:
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவ தமிழர்கள் கடந்த 20ஆம் நாள் 599 படகுகளில் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையினர் சுற்றி வளைத்திருக்கிறார்கள். ஏராளமான மீனவத் தமிழர்கள் தங்களது படகுகளை விரைந்து ஓட்டி வந்து கரையேறிவிட்டாலும் சில படகுகள், சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையின் சுற்றிவளைப்புக்குட்பட்டு 12 பேர் பிடிபட்டனர்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவ தமிழர்கள் கடந்த 20ஆம் நாள் 599 படகுகளில் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையினர் சுற்றி வளைத்திருக்கிறார்கள். ஏராளமான மீனவத் தமிழர்கள் தங்களது படகுகளை விரைந்து ஓட்டி வந்து கரையேறிவிட்டாலும் சில படகுகள், சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையின் சுற்றிவளைப்புக்குட்பட்டு 12 பேர் பிடிபட்டனர்.
அந்த 12 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நிறுத்தி சிங்கள இனவெறி அரசு சிறைபிடித்து வைத்தது. படகுகளையும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இந்த நிலையில்தான் இராமேஸ்வரம் மீனவத் தமிழர்கள் கடந்த 25 ஆம் நாள் முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலே ஈடுபட்டனர். அப்போதுதான் இந்த அதிர்ச்சிகரமான செய்தியும் கசிந்தது.
என்ன செய்தி?
சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள்- சிங்க இனவெறி கடற்படையினர் கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருக்கிறார்கள் என்ற செய்தி.
ஒரு உண்மையை இங்கு நாம் உணர வேண்டும்
இந்திய அரசுக்கு தெரியாமல் சிங்கள அரசு கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருக்க முடியாது. ஏனெனில் சிங்களக் கடற்படையினர் கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்ட செய்தி அறிந்ததும் எதிர்வினையாற்றி இருக்க வேண்டும் இந்திய அரசு.
ஆனால் இந்திய அரசு ஆற்றிய எதிர்வினை என்ன?
"தமிழ்நாட்டு மீனவர்களே நீங்கள் மீன்பிடிக்கச் செல்லாதீர்கள்- சிங்கள அரசு கடலில் கண்ணிவெடிகளை போட்டிருக்கிறது" என்று சொல்லுகிறார்கள். இது எவ்வளவு கேவலமானது- அருவருப்பானது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
முதல் உலக யுத்தத்தின் போதுதான் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் உண்டு.
இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்ற 1945-1949 வரையிலான காலகட்டத்தில் பாரசீக வளைகுடாக் கடற்பரப்பில் கடல் கண்ணிவெடிகளை போட்டிருந்ததாகவும் அந்த கண்ணிவெடிகளை 1988 ஆம் ஆண்டு அமெரிக்கக் கப்பல் ஒன்று மிதித்ததாகவும் அதில் அந்தக் கப்பல் சேதமடைந்ததாகவும் செய்திக்குறிப்புகள் சொல்லுகின்றன.
கடல் கண்ணிவெடிகள்- நிலக்கண்ணிவெடிகளைப் போன்றதல்ல. ஆனால் கடல் கண்ணிவெடிகள் மிதந்து கொண்டே- நகர்ந்து கொண்டே இருக்கும். ஓரிடத்தில் இருக்காது.
ஆகவே மிகப் பெரிய ஆபத்து அது. தீங்கு விளைவிக்கக்கூடியது.
இரண்டாவது- நிலத்தில் புதைக்கப்படுகிற கண்ணிவெடிகளின் ஆயுட்காலம் குறைவு.
ஆனால் கடலிலே மிதக்க விடுகிற- புதைக்க விடுகிற அந்தக் கண்ணிவெடிகளின் ஆயுள் மிக நீண்டது என்பது பாரசீகுடா வளைகுடா கண்ணிவெடிகள் வெடித்ததிலிருந்து உணரமுடிகிறது.
யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு என்பது சிறிலங்காவுக்குச் சொந்தமானது.
கச்சதீவு என்பது இந்திய அரசுக்குச் சொந்தமானது.
ஆனால் இந்திய அரசு- தமிழ்நாட்டைக் கேட்காமல்- தமிழ்நாட்டு முதலமைச்சரைக் கேட்காமல்- தமிழ்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் தமிழ்நாட்டினது ஒப்புதல் பெறாமல் 1970-களின் தொடக்கத்திலே கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது இந்திய அரசு.
கச்சத்தீவு கடற்பரப்பில் கண்ணிவெடிகளைப் போடுவதற்கு சிங்கள அரசுக்கு யார் அதிகாரம் தந்தது? எதற்காகக் கண்ணிவெடிகளைப் போடுகிறீர்கள்?
கண்ணிவெடிகளைப் போடுவது என்பதுகூட போர் நடைபெறுகிற சூழல்தான்.
இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே போர் மூளுகிற நடைபெறுகிற சூழலா உள்ளது?
விடுதலைப் புலிகளுக்கு எதிராக கண்ணிவெடிகளைப் போடுகிறீர்கள் என்றால் அது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இடையூறு இல்லாது இருக்க வேண்டும் அல்லவா?
அப்படிக் கண்ணிவெடிகளைப் போட்ட பின்னரும் கூட இந்திய அரசு ஆத்திரப்படவில்லை.
இந்திய அரசு - கண்டன அறிக்கை வெளியிடவில்லை.
கண்ணிவெடிகளை அகற்ற இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களை எச்சரிக்கிறது. மிகக் கேவலமான அணுகுமுறை இது.
கடலிலே கண்ணிவெடிகளை போட்டிருப்பது என்பது சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டிய ஒரு நடவடிக்கை.
இந்நேரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.
சிங்கள இனவெறி அரசானது பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கூடிக் குலாவினாலும் இந்திய அரசுக்கு எதிராக செயற்திட்டங்களை முன்னெடுத்தாலும் வலிந்து வலிந்து சிங்கள அரசுக்குத் துணை போகிறது.அதற்கு என்ன காரணம் எனில் தமிழீழம் அமைவதைத் தடுப்பதுதான்.
ராஜீவ் காந்தி கொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்படவில்லை என்பதே உண்மை.
உண்மையில் தமிழீழம் அமைவதில் இந்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை.
தமிழீழம் அமைவதை இந்திய அரசு விரும்பவில்லை.
சிங்கள அரசு - ஒரு கட்டத்திலே போனால் போகட்டும்- நம்மிடத்திலே இருப்பவன் கூலி வாங்கிக் கொண்டு போரிடுகிறான் - புலிகளோ உயிரைக் கொடுத்து சண்டை போடுகிறார்கள். எனவே ஈழத்தை பிரித்துக் கொடுத்துவிடுவோம் என்று அவன் கீழிறங்கி வந்துவிட்டால் தனக்கு ஆபத்து என இந்தியா நினைக்கிறது.
இரு பெரிய அரசுகளுக்கு தமிழீழம் அமைவதிலே விருப்பம் இல்லை.
1. அமெரிக்க அரசு.
2. இந்தியப் பேரரசு.
தமிழீழம் அமைவதை அவர்கள் விரும்பவில்லை- அதனாலேயே தடை விதித்திருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக புலிகள் மீது தடை விதிக்கவில்லை.
அப்படியானால் ராஜீவைக் கொன்றதற்காக அமெரிக்கா தடை விதித்தது? கனடா தேசம் ஏன் தடை விதித்தது? ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தது ராஜீவைக் கொன்றதற்கா?
ஏன் தடை விதித்திருக்கிறார்கள் என்றால் "அமெரிக்க ஏகாதிபத்திய"த்தின் நெருக்கடியால்தான் தடை விதித்திருக்கிறார்கள்.
இந்திய அரசு தடை விதித்திருப்பதற்கு 2 காரணங்கள் உண்டு.
1. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது தமிழீழத்துக்கு எதிராக இருக்கிறது- தமிழீழம் வந்தால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் எழுச்சிப் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது.
2. இந்திய அரசாங்கமும் அமெரிக்க அரசாங்கமும் கட்டுப்பட்ட அரசாங்கம். இந்தியாவின் பொருளாதார- வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கின்ற இடத்தில் அமெரிக்கா உள்ளது.
இதெல்லாம் காங்கிரசின் ஞானசேகரனுக்கும் அண்ணன் இளங்கோவனுக்கும் தெரியாமல்தான் ராஜீவ் காந்தி- ராஜீவ் காந்தி என்று எதற்கெடுத்தாலும் சொல்லுகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தவறு என்றுதான் சொல்லுகிறோம்.
என் இனத்திற்கு எதிராக நீ முடிவெடுக்கிறாய்- யாரைக் கேட்டு நீ முடிவெடுப்பது?
வெளிவிவகாரக் கொள்கை என்றால் 4 அதிகாரிகளை வைத்து முடிவெடுப்பதா?
அந்த அதிகாரிகளில் ஒருவனாவது தமிழன் உண்டா?
தமிழ்நாட்டு மக்களிடத்தில் கருத்து கேட்டீர்களா?
தமிழ்நாட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் கருத்து கேட்டீர்களா?
தமிழ்நாட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்டிருக்கிறீர்களா?
நாடாளுமன்ற மக்களவை- மாநிலங்களவையிலே விவாதித்திருக்கிறீர்களா?
தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்கிற வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களிடத்தில் கருத்து கேட்டீர்களா?
யாரிடத்திலே கேட்டீர்கள்?
தமிழ்நாட்டு மக்களிடத்திலே பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்-
இந்தியப் பேரரசுக்கும்
இந்திய தேசிய காங்கிரசுக்கும் துணிச்சல் இருந்தால் "தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை" என்று அறிவித்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்! முடியாது உங்களால்.
"தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை" பகிரங்கமாக பிரகடனம் செய்துவிட்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க துணிச்சல் இருந்தால் சந்தியுங்கள்!
காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன் தனியாக நின்றால் 4 வாக்குகள் வாங்குவாரா?
காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் தனியாக நின்றால் 3 வாக்குகள் வாங்குவாரா?
தி.மு.க.வின் தயவிலே வெற்றி பெற்றுவிட்டு இன்று தி.மு.க. அரசுக்கே நெருக்கடி கொடுப்பதா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1967ஆம் ஆண்டு சட்டம் பற்றி சொல்லியிருக்கின்றார்கள். அ.தி.மு.க, காங்கிரஸ் பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் தயவு இல்லாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது. காங்கிரசுக்கு இருக்கிற வாக்கு வங்கி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கிதான்.
இந்தத் திருமாவளவன் எழுப்பியிருக்கும் கருத்துரிமை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கருத்துரிமைக்காக.
நாங்கள் கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்தியதே முதல்வர் கலைஞருக்காகத்தான்.
தமிழ்நாட்டு முதல்வர்- 4 வரி கவிதை எழுதினால் அது "அம்மா"வுக்குப் பொறுக்கவில்லை.
ராஜீவ் கொலைக்கும்- புலிகள் மீதான தடைக்கும் இந்திய அரசினது வெளிவிவகாரக் கொள்கைதான் காரணம். இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை அச்சப்படுகிற கொள்கை.
தமிழீழம் அமைந்துவிட்டால் தமிழ்நாடு- தனிநாடாக விடும் என்று கற்பனையில் அச்சப்படுகிறார்கள்.
தமிழ்நாடு தனிநாடாகி விடும் என்று நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்-?
அப்படியானால் அதற்குரிய தேவை இருக்கிறது என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களா?
அதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளன என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களா?
தமிழ்நாடு- தனிநாடாகது என்று சொல்லக்கூடிய திராணியும் தெம்பும் ஏன் உங்களுக்கு இல்லை-
மறுபடியும் சொல்கிறேன்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இருந்தால் தமிழ்நாட்டின் ஆறரைக் கோடி மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள். இதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் வேண்டுகோள்.
தமிழ்நாட்டு மக்கள் சொல்லட்டும்- புலிகள் இயக்கத்தை தடை செய்யுங்கள் என்று-
தமிழ்நாட்டு மக்கள் சொல்லட்டும் தமிழீழம் அமைவதனை நாங்கள் விரும்பவில்லை என்று-
நாங்கள் வாயை மூடிக்கொள்கிறோம். "புளி"யை கரைத்து ரசம் வைப்பதைக் கூட நாங்கள் நிறுத்தி விடுகிறோம்.
தமிழ்நாட்டு மக்களினது உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழினத்தினது எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்?
சட்டம் கொண்டு வந்தால் அதற்கு கட்டுப்பட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை-
அது தவறு என்றால் தவறு என்று சொல்லக்கூடிய உரிமை எங்களுக்கு உண்டு.
அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு என்று சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு.
இந்திரா அம்மையாருக்கும் சிறீமாவுக்கும் இடையேயான ஒப்பந்தமானாலும் சரி தமிழ்நாட்டு மக்களினது கருத்து கேட்கப்பட்டதா?
கடல் எல்லைகள் வரையறை தொடர்பில் தமிழ்நாட்டு அதிகாரிகளின் கருத்து கேட்கப்பட்டதா?
கச்சத்தீவை தாரை வார்க்கிற அந்த ஒப்பந்தம் தொடர்பில் தமிழ்நாட்டு மக்களினது கருத்து கேட்கப்பட்டதா? தமிழ்நாடு முதல்வராக அப்போதிருந்த கலைஞரிடத்திலே சொல்லிவிட்டா செய்தீர்கள்?
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் போடப்பட்டதே- அது தமிழீழம் தொடர்பிலானது. அந்த விடுதலைப் போராளிகளிடத்தில் கருத்து கேட்டா போட்டீர்கள்?
அந்த ஒப்பந்தத்திலே மேதகு பிரபாகரன் கையெழுத்திட்டாரா?
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலிகள் கட்டுப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்? என்ன நீதி?
அந்த ஒப்பந்தத்தின்படி வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை சிங்கள அரசு மதித்திருக்கிறதா? நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறார்கள்?
கச்சத்தீவு கடற்பரப்பில் எமது மீனவ தமிழர்கள் சுதந்திரமாக மீன்பிடித்துவிட்டுத் திரும்ப வேண்டும்.
அதற்காக சிங்கள இனவெறி அரசு இந்திய அரசு போர் தொடுக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
கடலடியில் மிதக்கவிடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கண்டன உரையாற்றினார்.
Subscribe to:
Posts (Atom)