Friday, September 28, 2007

இராமன் தமிழர்களால் வழிபடவேண்டியவனோ, போற்றப்பட வேண்டியவனோ அல்ல...

"இராமசாமியின் மனைவி சீத்தாலட்சுமி முனுசாமியுடன் ஓடிவிட்டார் (முனுசாமி அவளை கடத்திச்சென்றுவிட்டார் என்று புகார் தரப்பட்டுள்ளது). சிலமாதம் கழித்து இராமசாமி அவரது தம்பி இலட்சுமணசாமி மற்றும் அவரது கூட்டாளி கோபால்சாமி ஆகியோருடன் முனுசாமி வீட்டிற்குச் சென்று அவரை கொன்றுவிட்டு தன்னுடைய மனைவி சீத்தாலட்சுமியை அழைத்துவந்தார். கொலை குற்றத்திற்காக இராமசாமியும் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக இலட்சுமணசாமி, கோபால்சாமி ஆகியோரையும் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்." என்பது போன்ற ஒரு சேதி நமது நாளிதழ்களில் அன்றாடம் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக ஓடியவர்களையும், திரும்ப அழைத்துக்கொண்டு வந்தவர்களையும் நாம் யாரும் வணங்குவதுமில்லை போற்றுவதுமில்லை...

இந்த நாளேட்டுச் செய்திக்கும் இராமாயண கதைக்கும் பெரியஅளவில் என்ன வேறுபாடு உள்ளது. மேற்குறிப்பிட்ட நிகழ்வில் தொடர்புடையவர்கள் என்பதற்காகவே அவர்களை நாம் வழிபடவேண்டுமா? அப்படி வணங்குவதென்றால் நாம் எத்தனை இராமனைத்தான் வணங்குவது...

இராமாயண கதை நாயகன் இராமனின் புகழ்பாடுவதாலோ அவன் பெயரை உச்சரிப்பதாலோ பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த நன்மையும் கிடைத்துவிடாது. அவன் பெயரை எப்போது அதிகமாக உச்சரிக்கிறோமோ அப்போதெல்லாம் படுகொலைகளுடன் கலவரம் மூண்டு நாடு திண்டாடுகிறது அல்லது நாடு துண்டாகிறது மீண்டும் நாடு துண்டாக வேண்டாம் என்று நினைப்பவர்கள் இரமனின் சுவடை அழிப்பதே நாட்டுக்கு நல்லது...

1 comment:

இரா.சுகுமாரன் said...

உங்கள் பதிவிற்கு நன்றி!

தேவையான பதிவு
word verification option ஐ எடுத்துவிடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு தெரிவிக்கவும். rajasugumaran@gmail.com

சுகுமாரன்