Friday, December 14, 2007

மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்...

இருபதாம் நூற்றாண்டின் தமிழின வரலாற்றில் திராவிட இயக்கத்தின் பணிகளை யாரும் மறைக்கமுடியாது.
அதேவேளையில் பெரியாரின் கொள்கையில் முரண்பட்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று உதயமான திராவிட முன்னேற்றக் கழகம் தன் குறிக்கோள்களை அடைந்ததா? இலக்கை அடைய இன்னும் எத்தனை தேர்தல்களை சந்திக்கவேண்டும்? இன்னும் எத்தனை முறை ஆட்சியில் அமர வேண்டும்? நடுவண் அரசில் இன்னும் எத்தனை முறை பங்கேற்க வேண்டும்? இலக்கை அடைய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? மனசாட்சி உள்ளவர்கள் மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்...
திராவிட முன்னேற்றக் கழகம்

இயக்கத்தின் குறிக்கோள்

தமிழ்மொழி - தமிழ் இனம் - தமிழ்நாடு - தமிழ்க் கலை - தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்!
சாதியின் பெயராலும் - மதத்தின் பெயராலும் - கடவுளின் பெயராலும்
வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது!
சுயமரியாதையும், பகுத்தறிவும் மிகுந்த
சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட வேண்டும்!
தாழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின்
வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும்!
இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும்!
இந்த இலட்சியங்களை அடையப் பாடுபடுவதே
திராவிட முன்னேற்றக் கழகம்

ஐம்பெரும் முழக்கங்கள்

1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
5. மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி

1 comment:

SOLLARATHUKU OONUM ILLA said...

பிரச்சனைகளுக்கு தீர்வுகானாமல் இருப்பதும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதும் நியாயமான கோரிக்கையைக் கூட அரசியல் காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதும், சுயநலத்திற்காக கொள்கை பேசுவதும் அதே சுயநலத்திறக்காக கொள்கையை குழிதோண்டி புதைப்பதும் தி.மு.க. விற்கும் அதில் உள்ளத தமிழின எதிரிகளுக்கும் கைவந்த கலை.

கடலூர் அனல் மின்நிலையம் தொடர்பான கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்காமல் பிரச்சனையை திசைதிருப்பி சாதி பிரச்சனையாக்கியது ஆற்காடு வீராசாமி நாயுடுதான்.

அனல் நிலையத்திற்காகவும், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்காக நிலங்களை இழப்பது பெருமளவில் வன்னியர்கள்தான். வன்னியர்கள் இந்தமன்னிற்கு சொந்தக்காரர்கள் மட்டுமல்ல அவர்கள் தமிழர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவும்.

இன்றைக்கு தமிழர்களின் நிலங்கள் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயர்கள் தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், சேட்டு மார்வாடிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பட்டா போட்டுத் தருவது தமிழின விரோதச் செயலே. சூடு சொரணை உள்ள இனமானத் தமிழன் இவைகளை நிச்சயம் எதிர்ப்பான்.

Yes Prabhakaran I accept your Thnking all are other cast have own join link and they move well plane to take share our Tamilnadu and Pondicherry so we are more alarte to failer their project in any way it come again we sure co operative with you all your activites.

Thanking very much share with you

and also now our Ariyankuppam many Ullnadu making their mass it is not good one they grown up with the mask of PMK so be aware of all ulnadu {paruvatha Raja kulam]

ok byeeeeeeeeeeeee
Yours
Original Ariyankuppathar Part-II