Friday, August 29, 2008

வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச கருணாநிதி முன்வரவேண்டும்-பழ.நெடுமாறன்

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.


1969-ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் நாடாளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.


அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.


அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.


1996-ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்த போது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவகவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.


1983-ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.


பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வரவேண்டும்.

Saturday, August 2, 2008

இரசினிகாந்தை கிழித்த அவரது இரசிகர்களை தமிழர்கள் பாராட்டவேண்டும்

இரசினிகாந்து நடித்து தற்போது வெளிவந்துள்ள “குலேசன்” என்ற திரைப்படம் கோயம்புத்தூரில் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பேனர்களைக் கிழித்து இரசிகர்கள் இரசினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு உருவான நிலையில் அதைக் கண்டித்து, சென்னையில் திரைத்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில் பேசிய இரசினிகாந்து, கன்னட வெறியர்களைக் கண்டித்து பேசினார்.

இப்போது இரசினிகாந்து நடித்த "குசேலன்' திரைப்படம் கர்நாடகத்தில் திரையிடப்படுவதற்கு கன்னட இரக்சண வேதிகே என்ற அமைப்பினரிடமிருந்து எதிர்ப்பு ஏற்பட்டது.

எனவே, சென்னைக் கூட்டத்தில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்து அறிக்கை வெளியிட்டார்.

கர்நாடக மாநிலத்தில் குசேலன் படத்தை திரையிட முடிவு செய்த திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நடிகை செயமாலா இதை பெங்களூரில் வியாழக்கிழமை அறிவித்தார்.

தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்று சென்னை உண்ணாவிரதத்தில் பேசிவிட்டு, தனது திரைப்பட வசூல் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக கன்னட ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிப்பதா என்று இசினி மீது அவருடைய இரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூரில் குசேலன் படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகங்களில் அப் படத்தின் பதாகைகளை அவர்கள் கிழித்து எறிந்தனர்.

இரசினிகாந்தின் உண்மை முகத்தை புரிந்துகொண்டு அவரது முகத்திரையை கிழித்தெரிந்த இரசினிகாந்தின் இரசிகர்களை ஒவ்வொரு தமிழனும் பாராட்டவேண்டும்.