Saturday, August 2, 2008

இரசினிகாந்தை கிழித்த அவரது இரசிகர்களை தமிழர்கள் பாராட்டவேண்டும்

இரசினிகாந்து நடித்து தற்போது வெளிவந்துள்ள “குலேசன்” என்ற திரைப்படம் கோயம்புத்தூரில் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பேனர்களைக் கிழித்து இரசிகர்கள் இரசினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு உருவான நிலையில் அதைக் கண்டித்து, சென்னையில் திரைத்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில் பேசிய இரசினிகாந்து, கன்னட வெறியர்களைக் கண்டித்து பேசினார்.

இப்போது இரசினிகாந்து நடித்த "குசேலன்' திரைப்படம் கர்நாடகத்தில் திரையிடப்படுவதற்கு கன்னட இரக்சண வேதிகே என்ற அமைப்பினரிடமிருந்து எதிர்ப்பு ஏற்பட்டது.

எனவே, சென்னைக் கூட்டத்தில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்து அறிக்கை வெளியிட்டார்.

கர்நாடக மாநிலத்தில் குசேலன் படத்தை திரையிட முடிவு செய்த திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நடிகை செயமாலா இதை பெங்களூரில் வியாழக்கிழமை அறிவித்தார்.

தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்று சென்னை உண்ணாவிரதத்தில் பேசிவிட்டு, தனது திரைப்பட வசூல் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக கன்னட ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிப்பதா என்று இசினி மீது அவருடைய இரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூரில் குசேலன் படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகங்களில் அப் படத்தின் பதாகைகளை அவர்கள் கிழித்து எறிந்தனர்.

இரசினிகாந்தின் உண்மை முகத்தை புரிந்துகொண்டு அவரது முகத்திரையை கிழித்தெரிந்த இரசினிகாந்தின் இரசிகர்களை ஒவ்வொரு தமிழனும் பாராட்டவேண்டும்.

1 comment:

ers said...

வாங்க அரியாங்குப்பத்தார். பதிவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் தங்களின் கருத்துக்கு நன்றி.