Monday, February 9, 2009

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்பு திருப்தியளிக்கின்றது: இராஜபக்சே

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்பு திருப்தியளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் த வீக் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை இலக்கு வைத்தே தமிழக அரசியல்வாதிகள் இலங்கை விவகாரங்களில் அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இனங்களைப் போன்றே தமிழர்களுக்கும் இலங்கையில் சமவுரிமை காணப்படுவதாகவும், அதனை மறுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் யுத்தம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அர்த்தப்படாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்று குறித்த தமது அர்ப்பணிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், நிச்சயமாக அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படக்கூடிய வகையில் இந்திய மத்திய அரசு ஒருபோதும் செயற்படாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நன்றி: புதினம்.காம்

2 comments:

Anonymous said...

"ஜோதிடப் புலி, சிங்கம், நரிகளும் வாயைத் திறக்கவே இல்லையே!
ஜோதிடத்திற்கு என்ன ஆயிற்று?

இந்து மத ஜோதிடர்கள் பஞ்சாங்கம் பொய் என்றால் கிரகணத்தைப் பார் என்று வீராப்பு பேசி வருவது உண்டு.

நாளை (9.2.09) நடக்க இருக்கும் சந்திர (கிரகணம்)க் குறை பற்றி பஞ்சாங்கம் எதுவும் சொல்லவில்லையாம்.

ஒரு பத்திரிகை மெனக்கெட்டு கோயில்களில் விசாரித்ததாம். திருப்பதி தலைமையிலிருந்து தகவல் ஏதும் கிடையாது என்று தப்பித்துக் கொண்டாராம் திருமலை திருப்பலை தேவஸ்தான செயல் அலுலவர் கோபாலகிருஷ்ணன்.

மயிலாப்பூர் கபாலி கோயில் அதிகாரிகள் தமக்கு அப்படி ஒரு நிகழ்வு உள்ளதாக என்பது பற்றித் தெரியாது எனக் கூறிவிட்டாராம்.

பல பஞ்சாங்கங்களிலும் இது பற்றி ஏதும் இல்லையாம்.

இதனால் ஜோசியர்கள் குழப்பத்தில் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்களாம்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (நாசா) சந்திரக் குறை பற்றித் தகவல் தந்துள்ளது.

ஆசியக் கண்டத்தின் பெரும்பாலான பாகங்களில் இது தெரியும் எனக் கூறியுள்ளது. இந்தியாவிலும் தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா பகுதிகளில் தெரியும் எனக் கூறப்பட்டுள்ளது.ஜோதிடப் புலிகளும், சிங்கங்களும், நரிகளும் வாயைத் திறக்கவே இல்லையே"

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்