1967ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழகத்தில் நடைபெற்று இருக்கிற பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் கொள்கை வழி நின்றோ, குறைந்தபட்சத் திட்ட அடிப்படையிலோ கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீடு செய்து கொள்வதற்காகக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.
1967ஆம் ஆண்டு ஒருபுறம் சுதந்திரா கட்சியுடனும், மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.
1971ஆம் ஆண்டு அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரசுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார்.
ஜஸ்டிஸ் கட்சிக் காலம் முதல் தி.மு.க. காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பிலேயே ஊறி வளர்ந்த ஒரு கட்சி, காங்கிரசுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கவில்லை. காமராஜரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா - கருணாநிதி கூட்டு உருவானது.
ஆனால், இந்த கூடாத நட்பு நெடுநாள் நீடிக்கவில்லை. 1976ஆம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியின் ஆட்சியை இந்திரா பதவி நீக்கம் செய்தார். தி.மு.க.வுக்கு எதிராகக் கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க "சர்க்காரியா கமிஷனை' இந்திரா அமைத்தார்.
1977ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்க்க ஜனதா கட்சியுடன் கருணாநிதி கரம் கோர்த்தார்.
1978ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரைக்கு இந்திராகாந்தி வந்தபோது அவருக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல் நடத்த தி.மு.க. தயங்கவில்லை.
ஆனால், மறு ஆண்டே நிலைமை மாறியது. 1979 இறுதியில் அதே இந்திராவின் தலைமையில் உள்ள காங்கிரசுடன் கருணாநிதி கூட்டுச் சேர்ந்தார். ""நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!'' என முழங்கினார்.
1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.
1989ஆம் ஆண்டு வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு அளித்தது.
1991இல் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1998இல் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.
1999இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கைகோர்த்தது.
2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.
மத்தியில் ஆளும் கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர இரு கழகங்களும் தமக்குள் போட்டியிட்டன.
1979இல் சரண்சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இரு அ.தி.மு.க.வினர் அமைச்சரானார்கள்.
1989இல் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது.
1998ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது.
1999ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மீண்டும் 2003ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.
தில்லியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவே இரு கழகங்களும் இவ்வாறு செய்தன.
ஆனால் மத்திய ஆட்சிகளில் அங்கம் வகித்தும் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகள் சேதுகால்வாய்த் திட்டம் எதனையும் தீர்க்க இரு கழகங்களாலும் முடியவில்லை.
நன்றி: தினமணி
Wednesday, June 25, 2008
தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை-பழ.நெடுமாறன்
அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பா.ம.க.வை தி.மு.க. வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல.
பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை.
தி.மு.க. தலைமையின் இழிசொல்லுக்கும், பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக்கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.
மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும், குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை.
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக் கொண்டதில்லை.
நன்றி: தினமணி
பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை.
தி.மு.க. தலைமையின் இழிசொல்லுக்கும், பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக்கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.
மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும், குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை.
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக் கொண்டதில்லை.
நன்றி: தினமணி
Saturday, June 7, 2008
சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழக அரசு விருது! தமிழக அரசு "டாஸ்மார்க்கில் சரக்கு வித்து பணத்தை சேர்ப்பது இதற்குத்தானா?”
சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழக அரசு விருது! தமிழக அரசு "டாஸ்மார்க்கில் சரக்கு வித்து பணத்தை சேர்ப்பது இதற்குத்தானா?”
கடந்த 2006-ஆம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
விருதிற்கான சின்னத்திரை தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து, விடுதலை, வசந்த், கண்மணி சுப்பு, டி.வி.சங்கர், இராஜசேகர், செய்தித்துறை செயலாள, இயக்குநர், துணை இயக்குநர் என அரசு குழு அமைத்து விருதிற்குரியவர்களை தேர்ந்தெடுத்தது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 (1 பவுன் தங்கம் சுமார் ரூ.10,000 5 பவுன் ரூ.50,000 ஆன அறிவிக்கப்பட்ட 17 கலைஞர்களுக்கும் சேர்த்து ஆக மொத்தம் ரூ.8,50,000) பவுனில் தங்கப் பதக்கமும் நினைவுப் பரிசும் நாள் குறித்தப்பின் தமிழக முதல்வர் வழங்குவார் என அரசு அறிவித்துள்ளது. மிகக் மகிழ்ச்சி...
எங்களைப்போன்ற சாதாரண அறிவு படைத்த மக்களுக்கு கீழ்கண்ட சில ஐயங்கள் எழுகின்றன.
பகுதி-1
1. சின்னத்திரை தொடர்களால் தமிழ்நாட்டில் என்னென்ன நன்மைகள் நிகழ்ந்தன?
2. சின்னத்திரை கலைஞர்களின் சமூக பங்களிப்பு என்ன?
3. சின்னத்திரை என்றால் தொடர்கள் மட்டும்தானா? மற்ற நிகழ்ச்சிகளை கணக்கில் எடுத்துகொள்ளாதது ஏன்?
4. தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் எந்த அளவுகோலை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
5. 2006-ஆம் ஆண்டு சின்னத்திரை தொடர்களுக்கு 2008-ஆம் ஆண்டு பரிசு வழங்க வேண்டிய அவசிய தேவை என்ன?
பகுதி-2
1. நடுவர் குழுவினர் அனைவரும் 2006-ஆம் ஆண்டு முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சி தொடர்களையும் தவறாமல் பார்த்தார்களா? அல்லது குறுவட்டின் மூலம் நாள்கணக்கில் ஒன்றாக அமர்ந்து பார்த்தார்களா? அல்லது 2006-ஆம் ஆண்டு தொடங்கிய தொடர்களை பார்த்து முடிக்க 2008 சூன் மாதம் வரை ஆனதா?
2. நடுவர் குழுவில் உள்ள நீதிபதி மருதமுத்து அனைத்து தொடர்களையும் பார்த்தாரா? பார்த்தார் என்றால் எப்போது பார்த்தார்? நீதிமன்றத்திற்கு அவர் எப்போது சென்றார்?
3. நடுவர் குழுவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பணிகள் என்ன?
இந்த ஐயத்தைப் போக்க சின்னத்திரை அறிஞர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும் முயன்றால் மகிழ்ச்சி. ஆனால் அவர்களுக்கு நேரம் இருக்காது 2007-ஆம் ஆண்டு விருதிற்காக தொடர்களை இப்போதே பார்க்கத் தொடங்கினால்தான் 2009-ஆம் ஆண்டு அவர்களுக்கு விருது வழங்க முடியும்.
தமிழக அரசு தமிழர்களுக்கான அரசாக மாறுவது எப்போது?
கடந்த 2006-ஆம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
விருதிற்கான சின்னத்திரை தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து, விடுதலை, வசந்த், கண்மணி சுப்பு, டி.வி.சங்கர், இராஜசேகர், செய்தித்துறை செயலாள, இயக்குநர், துணை இயக்குநர் என அரசு குழு அமைத்து விருதிற்குரியவர்களை தேர்ந்தெடுத்தது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 (1 பவுன் தங்கம் சுமார் ரூ.10,000 5 பவுன் ரூ.50,000 ஆன அறிவிக்கப்பட்ட 17 கலைஞர்களுக்கும் சேர்த்து ஆக மொத்தம் ரூ.8,50,000) பவுனில் தங்கப் பதக்கமும் நினைவுப் பரிசும் நாள் குறித்தப்பின் தமிழக முதல்வர் வழங்குவார் என அரசு அறிவித்துள்ளது. மிகக் மகிழ்ச்சி...
எங்களைப்போன்ற சாதாரண அறிவு படைத்த மக்களுக்கு கீழ்கண்ட சில ஐயங்கள் எழுகின்றன.
பகுதி-1
1. சின்னத்திரை தொடர்களால் தமிழ்நாட்டில் என்னென்ன நன்மைகள் நிகழ்ந்தன?
2. சின்னத்திரை கலைஞர்களின் சமூக பங்களிப்பு என்ன?
3. சின்னத்திரை என்றால் தொடர்கள் மட்டும்தானா? மற்ற நிகழ்ச்சிகளை கணக்கில் எடுத்துகொள்ளாதது ஏன்?
4. தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் எந்த அளவுகோலை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
5. 2006-ஆம் ஆண்டு சின்னத்திரை தொடர்களுக்கு 2008-ஆம் ஆண்டு பரிசு வழங்க வேண்டிய அவசிய தேவை என்ன?
பகுதி-2
1. நடுவர் குழுவினர் அனைவரும் 2006-ஆம் ஆண்டு முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சி தொடர்களையும் தவறாமல் பார்த்தார்களா? அல்லது குறுவட்டின் மூலம் நாள்கணக்கில் ஒன்றாக அமர்ந்து பார்த்தார்களா? அல்லது 2006-ஆம் ஆண்டு தொடங்கிய தொடர்களை பார்த்து முடிக்க 2008 சூன் மாதம் வரை ஆனதா?
2. நடுவர் குழுவில் உள்ள நீதிபதி மருதமுத்து அனைத்து தொடர்களையும் பார்த்தாரா? பார்த்தார் என்றால் எப்போது பார்த்தார்? நீதிமன்றத்திற்கு அவர் எப்போது சென்றார்?
3. நடுவர் குழுவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பணிகள் என்ன?
இந்த ஐயத்தைப் போக்க சின்னத்திரை அறிஞர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும் முயன்றால் மகிழ்ச்சி. ஆனால் அவர்களுக்கு நேரம் இருக்காது 2007-ஆம் ஆண்டு விருதிற்காக தொடர்களை இப்போதே பார்க்கத் தொடங்கினால்தான் 2009-ஆம் ஆண்டு அவர்களுக்கு விருது வழங்க முடியும்.
தமிழக அரசு தமிழர்களுக்கான அரசாக மாறுவது எப்போது?
Friday, June 6, 2008
புலிகளுக்கு எதிராக இந்தியா! பகத்சிங்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு
இந்தியாவின் மிகவும் ஈர்க்கப்பட்ட விடுதலை வீரரான பகத்சிங்கின் குடும்பத்தினர் இந்திய இராணுவம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங் ஆவார். இவரது மகன் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அண்மையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரியாக தான் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதை எனது தந்தை விரும்பவில்லை. 'எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நியாயத்திற்காக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதினர்' என்கிறார் அவர்.
யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான போரில் சிறந்த பணி புரிந்தமைக்காக மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழாவிற்கு அவரது தந்தை வர மறுத்துவிட்டார். 'அங்கீகரிக்கப்படாமலே போய்விட்ட பெரும் தியாகங்களை புரிந்தவர் களுக்கு எதிராக தன் மகன் போரிட்டதற்காக கெளரவிக்கப் படுவதை என் தந்தையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்கிறார் அவர்.பிரிட்டிசாரிடமிருந்து இலங்கை விடுதலை பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்தே ஈழத் தமிழர்கள் இந்திய விடுதலை வீரர்கள் மீது பெரும் பற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீடுகளில் இந்திய விடுதலை வீரர்களின் படங்கள் மாட்டப் பட்டிருக்கும்.
கர்னல் கிட்டுவின் தந்தை ஒரு காந்தியவாதி. தன் மூத்த மகனுக்கு காந்தி என்றே பெயரிட்டார். அவர் வீட்டில் காந்தி, நேரு, திலகர் ஆகிய இந்திய தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கிட்டு தன் பங்கிற்கு பகத்சிங்கின் படத்தையும் மாட்டினார்.தளபதி பண்டிதரின் வீட்டில் பகத்சிங், நேதாஜி ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1980களில் 'சண்டே' ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில், தன்னை மிகவும் கவர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் பகத்சிங்கை முதன்மைப் படுத்தி கூறியிருந்தார். அத்தோடு நேதாஜியையும் குறிப்பிட்டிருந்தார்.
இன்றளவிலும் பாரதியின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' போன்ற விடுதலைப் பாடல்கள் ஈழத்தில் பாடப்படுகின்றன. பழ. நெடுமாறன் அவர்கள் ஈழத்தில் செய்த முதல் சுற்றுப்பயணத்தின் ஒளிப்படத்திற்கு பிரபாகரன் 'சுதந்திர தாகம்' என்றே பெயரிட்டார். இந்த குறிப்பிட்ட பாடலின் அடிப்படையிலேயே 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற முழக்கம் அமைக்கப்பட்டது.
இந்த அளவிற்கு இந்திய விடுதலை வீரர்களை நேசித்த, தங்களவர்களாக நினைத்த ஈழத்தமிழர்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் தான் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. அதிலும் "உலகில் எந்த மூலையில் சுதந்திரப் போராட்டம் நடந்தாலும் அதனை ஆதரிப்பதே எங்கள் வெளியுறவுக் கொள்கை" என பிரதமராக தனது முதல் உரையிலேயே அறிவித்த ஜவகர்லால் நேருவின் பேரன் இராஜீவ் காந்தியின் காலத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது மிகக் கொடுமையானது.
விடுதலை வேட்கை கொண்ட ஒவ்வொருவரும், மானுட விடுதலையை வேண்டும் ஒவ்வொருவரும், உலகில் எங்கு விடுதலைப் போராட்டம் நடந்தாலும் அதற்கு ஆதரவாகவே நிற்பார்கள் என்பதற்கு பகத்சிங்கின் குடும்பத்தினரே சான்று.
நன்றி: தென்செய்தி
பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங் ஆவார். இவரது மகன் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அண்மையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரியாக தான் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதை எனது தந்தை விரும்பவில்லை. 'எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நியாயத்திற்காக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதினர்' என்கிறார் அவர்.
யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான போரில் சிறந்த பணி புரிந்தமைக்காக மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழாவிற்கு அவரது தந்தை வர மறுத்துவிட்டார். 'அங்கீகரிக்கப்படாமலே போய்விட்ட பெரும் தியாகங்களை புரிந்தவர் களுக்கு எதிராக தன் மகன் போரிட்டதற்காக கெளரவிக்கப் படுவதை என் தந்தையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்கிறார் அவர்.பிரிட்டிசாரிடமிருந்து இலங்கை விடுதலை பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்தே ஈழத் தமிழர்கள் இந்திய விடுதலை வீரர்கள் மீது பெரும் பற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீடுகளில் இந்திய விடுதலை வீரர்களின் படங்கள் மாட்டப் பட்டிருக்கும்.
கர்னல் கிட்டுவின் தந்தை ஒரு காந்தியவாதி. தன் மூத்த மகனுக்கு காந்தி என்றே பெயரிட்டார். அவர் வீட்டில் காந்தி, நேரு, திலகர் ஆகிய இந்திய தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கிட்டு தன் பங்கிற்கு பகத்சிங்கின் படத்தையும் மாட்டினார்.தளபதி பண்டிதரின் வீட்டில் பகத்சிங், நேதாஜி ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1980களில் 'சண்டே' ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில், தன்னை மிகவும் கவர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் பகத்சிங்கை முதன்மைப் படுத்தி கூறியிருந்தார். அத்தோடு நேதாஜியையும் குறிப்பிட்டிருந்தார்.
இன்றளவிலும் பாரதியின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' போன்ற விடுதலைப் பாடல்கள் ஈழத்தில் பாடப்படுகின்றன. பழ. நெடுமாறன் அவர்கள் ஈழத்தில் செய்த முதல் சுற்றுப்பயணத்தின் ஒளிப்படத்திற்கு பிரபாகரன் 'சுதந்திர தாகம்' என்றே பெயரிட்டார். இந்த குறிப்பிட்ட பாடலின் அடிப்படையிலேயே 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற முழக்கம் அமைக்கப்பட்டது.
இந்த அளவிற்கு இந்திய விடுதலை வீரர்களை நேசித்த, தங்களவர்களாக நினைத்த ஈழத்தமிழர்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் தான் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. அதிலும் "உலகில் எந்த மூலையில் சுதந்திரப் போராட்டம் நடந்தாலும் அதனை ஆதரிப்பதே எங்கள் வெளியுறவுக் கொள்கை" என பிரதமராக தனது முதல் உரையிலேயே அறிவித்த ஜவகர்லால் நேருவின் பேரன் இராஜீவ் காந்தியின் காலத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது மிகக் கொடுமையானது.
விடுதலை வேட்கை கொண்ட ஒவ்வொருவரும், மானுட விடுதலையை வேண்டும் ஒவ்வொருவரும், உலகில் எங்கு விடுதலைப் போராட்டம் நடந்தாலும் அதற்கு ஆதரவாகவே நிற்பார்கள் என்பதற்கு பகத்சிங்கின் குடும்பத்தினரே சான்று.
நன்றி: தென்செய்தி
Thursday, April 10, 2008
சிறிலங்காவுக்கு 10 ஆயிரம் ஏவுகணைகள் விற்பனை: ஸ்லோவோக்கியாவுக்கு ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்பு
சிறிலங்காவுக்கு 10,000 இராணுவ ஏவுகணைகளை ஸ்லோவோக்கியா விற்பனை செய்துள்ளதாக "உலகப் பாதுகாப்பு" அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஸ்லோவோக்கியாவின் இந்த செயற்பாடானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் என்றும் அந்த அமைப்பு சாடியுள்ளது.
25 ஆண்டுகளாக போர் நடந்து வரும் இலங்கையில் இந்த ஆயுதங்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் அது கவலை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய அபாயகரமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நடத்தை விதிமுறைகள் தடை செய்திருக்கின்றன என்று அந்த அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழுத் தலைவர் றோய் ஸ்பிஸ்டெர் தெரிவித்துள்ளார்.
"எங்கு மனித உரிமை மீறல்கள் எங்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதோ" அல்லது " எங்கு பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்திருக்கிறதோ" அப்பகுதிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அந்த நடத்தை விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இன மோதல்களில் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களால் சில நேரங்களில் பொதுமக்கள் "பாரபட்சமின்றி" பாதிக்கப்படுகின்றனர் என்று அறிக்கைகள் வெளியாகியிருப்பதையும் றோய் ஸ்பிஸ்டெர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"சிறிலங்கா அரசாங்கமானது போர் நடைபெறும் பகுதிகளுக்கு பெரும்பாலான சுயாதீன கண்காணிப்பாளர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதால் முழு உண்மை அறிய முடியாமல் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் வெளி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பெனிட்டா பெரிர்ரோவின் பேச்சாளர் கிறிஸ்டினா ஹோக்மான், ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடும் எப்படி நடத்தை விதிமுறைகளை செயற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விற்பனை தொடர்பிலான நடத்தை விதிகளை மீறவில்லை என்று ஸ்லோவோக்கிய பொருண்மிய அமைச்சு கூறியுள்ளது.
நன்றி: புதினம்.காம்
ஸ்லோவோக்கியாவின் இந்த செயற்பாடானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் என்றும் அந்த அமைப்பு சாடியுள்ளது.
25 ஆண்டுகளாக போர் நடந்து வரும் இலங்கையில் இந்த ஆயுதங்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் அது கவலை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய அபாயகரமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நடத்தை விதிமுறைகள் தடை செய்திருக்கின்றன என்று அந்த அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழுத் தலைவர் றோய் ஸ்பிஸ்டெர் தெரிவித்துள்ளார்.
"எங்கு மனித உரிமை மீறல்கள் எங்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதோ" அல்லது " எங்கு பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்திருக்கிறதோ" அப்பகுதிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அந்த நடத்தை விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இன மோதல்களில் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களால் சில நேரங்களில் பொதுமக்கள் "பாரபட்சமின்றி" பாதிக்கப்படுகின்றனர் என்று அறிக்கைகள் வெளியாகியிருப்பதையும் றோய் ஸ்பிஸ்டெர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"சிறிலங்கா அரசாங்கமானது போர் நடைபெறும் பகுதிகளுக்கு பெரும்பாலான சுயாதீன கண்காணிப்பாளர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதால் முழு உண்மை அறிய முடியாமல் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் வெளி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பெனிட்டா பெரிர்ரோவின் பேச்சாளர் கிறிஸ்டினா ஹோக்மான், ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடும் எப்படி நடத்தை விதிமுறைகளை செயற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விற்பனை தொடர்பிலான நடத்தை விதிகளை மீறவில்லை என்று ஸ்லோவோக்கிய பொருண்மிய அமைச்சு கூறியுள்ளது.
நன்றி: புதினம்.காம்
Saturday, April 5, 2008
கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல்!
கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல் ஏன்?
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்
தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட மக்களினது குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமாகும்.
சாதாரணமாக குடிடிநீரில் லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் அளவுக்குத்தான் அளவுக்குத்தான் ஃபுளோரைடு இருக்க வேண்டும். அதனைவிட அதிகமாக இருந்தால் அந்த நீர், குடிப்பதற்கு உகந்தது இல்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 80 ஒன்றியங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் ஃபுளோரைடின் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது. அதாவது, ஒரு லீற்றர் நீருக்கு 8 மி.லி. முதல் 11 மி.லி. வரை இருக்கிறது. இந்த நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களை ஃபுளோரைசிஸ் தாக்குவது உறுதி. இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று நீராதாரம் வேண்டும். அதற்காகவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி - இவை, தமிழகத்தின் முதன்மையான நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்கள். ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு வறட்சிதான். மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே கட்டப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணை நீரிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 1980-களின் பிற்பகுதியில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்று நீரை வைத்து இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பது பற்றி யோசிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் நீராதாரம், காவிரி ஆறு. பிலிகுண்டுவில் இருந்து மேட்டூர் அணைக்குச் செல்லும் வழியில் ஒகேனக்கல் அருவிக்குச் சற்று மேலே சத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் மேலோட்ட நீரில் இருந்து இதற்கான தண்ணீர் எடுக்கப்படும்.
4 இயந்திரங்கள் மூலம் நிமிடத்திற்கு 1,18,000 லீற்றர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்தச் சுத்திகரிப்பு நிலையம், சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். பிறகு அங்கிருந்து மீண்டும் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு, இடைநிலை நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படும். பிறகு மறுபடி இயந்திரங்கள் மூலம் உந்தப்பட்டு 3.5 கி.மீ. தொலைவில் உள்ள மடம் என்ற மேடான இடத்தில் உள்ள பிரதான குடிநீர்த் தொட்டியை அடையும். சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தத் தொட்டியில் தேக்க முடியும்.
இந்தத் தொட்டியிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் (ஓசூர் தவிர) புவியீர்ப்பு விசை மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
ஓசூர் மற்றும் அதற்குச் செல்லும் வழியிலுள்ள பகுதிகள் மேடாக இருப்பதால் ஆங்காங்கே இடைநிலைத் தொட்டிகள் வைத்து, இயந்திரங்கள் மூலம் அத்தொட்டிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், விநியோகம், சுத்திகரிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.51.65 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் 85 சதவிகிதத்தைச் அனைத்துலக ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கி கடனாக வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் 90 லீற்றரும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 70 லீற்றரும் கிராமக் குடியிருப்புக்களில் வசிப்பவருக்கு 40 லீற்றரும் கிடைக்கும். இதன் மூலம் 30 லட்சம் பேர்கள் பயன் அடைவார்கள்.
இந்தத் திட்டத்தால் காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர், ஒகேனக்கலைக் கடந்து செல்கிறது. இதில் வெறும் 1.42 டி.எம்.சி. தண்ணீரே இந்தத் திட்டத்திற்காக எடுக்கப்படுகிறது.
திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2009 வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 இல் குடிநீர் விநியோகம் தொடங்கலாம் என்று குடிநீர் வாரியம் எதிர்பார்க்கிறது.
இத்திட்டத்துக்கு 1988 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய மத்திய அரசின் சுற்றுப் புறச் சூழல்- வனத்துறை- ஊரக வளர்ச்சித்துறை- நீர்வள ஆதாரத்துறை ஆகியவையும் 1988 ஆம் ஆண்டிலே அனுமதி அளித்தன. இந்நிலையில் கடந்த பெப்ரவரி 26 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டுக்குரிய தமிழ்நாட்டுப் பகுதிக்கு வந்தடைகின்ற காவிரி நீரிலிருந்து தமிழ்நாட்டின் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படுகிற திட்டம் இது.
பிரச்சினையைத் தூண்டிய கர்நாடகம்
ஆனால் இந்தத் திட்டத்திற்கும் எதற்குமே தொடர்பு இல்லாத கர்நாடகத்தின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான எடியூரப்பா கடந்த மார்ச் 16 ஆம் நாள் ஒகேனக்கல்லுக்குச் சென்று கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்றும் உரிமை கோரிவிட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மார்ச் 17 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் விளக்கக் கடிதம் அனுப்பினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய சிறிய கன்னட அமைப்பினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒகேனக்கல் தொடங்கி ஈரோடு, உதகமண்டலம் என பல பகுதிகளுக்கும் உரிமை கோரி அறிக்கைவிடுவதும் ஒகேனக்கல்லில் உள்ள கர்நாடகப் பகுதியில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன.
மேலும் இதன் உச்சகட்டமாக பெங்களுரில் உள்ள தமிழ்ச் சங்கம் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் பெங்களுரில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிட்ட திரை அரங்கங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான வாகனங்களும் அரசுப் பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் தமிழ்நாடு- கர்நாடகம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பெங்களுரில் உள்ள "தினத்தந்தி" நாளிதழின் அலுவலகமும் நாசமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27 ஆம் நாள் கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனைத்துக் கட்சி தமிழின உணர்வாளர்கள் திரண்டு சென்று கன்னடர்கள் நடத்தி வரும் வணிக வளாகங்கள்- கன்னட சங்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் செயற்படும் அனைத்து திரைப்படம் சார் சங்கங்களும் இணைந்து சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் உண்ணாநிகழ்வுப் போராட்டத்தை நடத்தினர்.
தமிழகத்தின் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோர் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டோரின் உரைகளில் தமிழ்த் தேசியத்தின் வீச்சு வெளிப்பட்டது.
இயக்குநர்கள் சேரன், சீமான், நடிகர்கள் ராஜ்கிரண், செந்தில் உரையைத் தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் ஆவேசமாக ஆணித்தரமாக வெளிப்படையாக தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார்.
நன்றி: புதினம்.காம்
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்
தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட மக்களினது குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமாகும்.
சாதாரணமாக குடிடிநீரில் லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் அளவுக்குத்தான் அளவுக்குத்தான் ஃபுளோரைடு இருக்க வேண்டும். அதனைவிட அதிகமாக இருந்தால் அந்த நீர், குடிப்பதற்கு உகந்தது இல்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 80 ஒன்றியங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் ஃபுளோரைடின் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது. அதாவது, ஒரு லீற்றர் நீருக்கு 8 மி.லி. முதல் 11 மி.லி. வரை இருக்கிறது. இந்த நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களை ஃபுளோரைசிஸ் தாக்குவது உறுதி. இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று நீராதாரம் வேண்டும். அதற்காகவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி - இவை, தமிழகத்தின் முதன்மையான நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்கள். ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு வறட்சிதான். மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே கட்டப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணை நீரிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 1980-களின் பிற்பகுதியில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்று நீரை வைத்து இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பது பற்றி யோசிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் நீராதாரம், காவிரி ஆறு. பிலிகுண்டுவில் இருந்து மேட்டூர் அணைக்குச் செல்லும் வழியில் ஒகேனக்கல் அருவிக்குச் சற்று மேலே சத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் மேலோட்ட நீரில் இருந்து இதற்கான தண்ணீர் எடுக்கப்படும்.
4 இயந்திரங்கள் மூலம் நிமிடத்திற்கு 1,18,000 லீற்றர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்தச் சுத்திகரிப்பு நிலையம், சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். பிறகு அங்கிருந்து மீண்டும் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு, இடைநிலை நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படும். பிறகு மறுபடி இயந்திரங்கள் மூலம் உந்தப்பட்டு 3.5 கி.மீ. தொலைவில் உள்ள மடம் என்ற மேடான இடத்தில் உள்ள பிரதான குடிநீர்த் தொட்டியை அடையும். சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தத் தொட்டியில் தேக்க முடியும்.
இந்தத் தொட்டியிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் (ஓசூர் தவிர) புவியீர்ப்பு விசை மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
ஓசூர் மற்றும் அதற்குச் செல்லும் வழியிலுள்ள பகுதிகள் மேடாக இருப்பதால் ஆங்காங்கே இடைநிலைத் தொட்டிகள் வைத்து, இயந்திரங்கள் மூலம் அத்தொட்டிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், விநியோகம், சுத்திகரிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.51.65 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் 85 சதவிகிதத்தைச் அனைத்துலக ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கி கடனாக வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் 90 லீற்றரும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 70 லீற்றரும் கிராமக் குடியிருப்புக்களில் வசிப்பவருக்கு 40 லீற்றரும் கிடைக்கும். இதன் மூலம் 30 லட்சம் பேர்கள் பயன் அடைவார்கள்.
இந்தத் திட்டத்தால் காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர், ஒகேனக்கலைக் கடந்து செல்கிறது. இதில் வெறும் 1.42 டி.எம்.சி. தண்ணீரே இந்தத் திட்டத்திற்காக எடுக்கப்படுகிறது.
திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2009 வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 இல் குடிநீர் விநியோகம் தொடங்கலாம் என்று குடிநீர் வாரியம் எதிர்பார்க்கிறது.
இத்திட்டத்துக்கு 1988 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய மத்திய அரசின் சுற்றுப் புறச் சூழல்- வனத்துறை- ஊரக வளர்ச்சித்துறை- நீர்வள ஆதாரத்துறை ஆகியவையும் 1988 ஆம் ஆண்டிலே அனுமதி அளித்தன. இந்நிலையில் கடந்த பெப்ரவரி 26 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டுக்குரிய தமிழ்நாட்டுப் பகுதிக்கு வந்தடைகின்ற காவிரி நீரிலிருந்து தமிழ்நாட்டின் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படுகிற திட்டம் இது.
பிரச்சினையைத் தூண்டிய கர்நாடகம்
ஆனால் இந்தத் திட்டத்திற்கும் எதற்குமே தொடர்பு இல்லாத கர்நாடகத்தின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான எடியூரப்பா கடந்த மார்ச் 16 ஆம் நாள் ஒகேனக்கல்லுக்குச் சென்று கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்றும் உரிமை கோரிவிட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மார்ச் 17 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் விளக்கக் கடிதம் அனுப்பினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய சிறிய கன்னட அமைப்பினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒகேனக்கல் தொடங்கி ஈரோடு, உதகமண்டலம் என பல பகுதிகளுக்கும் உரிமை கோரி அறிக்கைவிடுவதும் ஒகேனக்கல்லில் உள்ள கர்நாடகப் பகுதியில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன.
மேலும் இதன் உச்சகட்டமாக பெங்களுரில் உள்ள தமிழ்ச் சங்கம் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் பெங்களுரில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிட்ட திரை அரங்கங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான வாகனங்களும் அரசுப் பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் தமிழ்நாடு- கர்நாடகம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பெங்களுரில் உள்ள "தினத்தந்தி" நாளிதழின் அலுவலகமும் நாசமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27 ஆம் நாள் கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனைத்துக் கட்சி தமிழின உணர்வாளர்கள் திரண்டு சென்று கன்னடர்கள் நடத்தி வரும் வணிக வளாகங்கள்- கன்னட சங்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் செயற்படும் அனைத்து திரைப்படம் சார் சங்கங்களும் இணைந்து சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் உண்ணாநிகழ்வுப் போராட்டத்தை நடத்தினர்.
தமிழகத்தின் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோர் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டோரின் உரைகளில் தமிழ்த் தேசியத்தின் வீச்சு வெளிப்பட்டது.
இயக்குநர்கள் சேரன், சீமான், நடிகர்கள் ராஜ்கிரண், செந்தில் உரையைத் தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் ஆவேசமாக ஆணித்தரமாக வெளிப்படையாக தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார்.
நன்றி: புதினம்.காம்
Tuesday, April 1, 2008
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: இந்தியப் பிரதமருக்கு பா.மக. நிறுவனர் இராமதாசு கடிதம்
எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை மருத்துவர் இராமதாஸ் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழர்களின் நியாயமான விருப்பங்களுக்கு இடமளிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. தமிழர்களை அடிமைப்படுத்துகிற, அழித்தொழிக்கிற திட்டத்தை மிகத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.
இந்தியாவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன ஒப்பந்தம் இப்போது உயிரற்றுப் போய்விட்டது. நோர்வே நாட்டின் அமைதி முயற்சியில் உருவான போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த 2002 ஆம் ஆண்டின் ரணில் விக்கிரமசிங்க - பிரபாகரன் ஒப்பந்தம், இலங்கை அரசால் இப்போது குப்பைக் கூடையில் போடப்பட்டுள்ளது.
இந்த வகையில் இலங்கை அரசு வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசாகிவிட்டது. அராஜக காட்டாட்சியாகி விட்டது. மனிதகுலத்துக்கே அது வெட்கக்கேடாகி விட்டது. தன் சொந்தத் தமிழ்க் குடிமக்களையே மிரட்டி நடுங்க வைக்கும் அரசாகி விட்டது.
இந்தப் போர்வெறி நோக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கிக் குவித்து வருகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்தான் இப்போது அந்நாட்டின் தூதுவராகக் கொழும்பில் இருக்கிறார். தன் போர்ப்படை நோக்கங்களுக்காக, இலங்கையில் காலூன்றுவதற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு நாடு சீனா. இலங்கைக்கு சீனாவின் ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் என்ற போர்வையில், இலங்கைக்கு ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும், இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சியையும் அமெரிக்கா அளித்து வருகிறது. இலங்கையின் இந்த ஆயுதத் தொகுப்புக்கு, இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி வருவதாக நாங்கள் அறிகிறோம்.
இந்த ஆயுதங்களை பயன்படுத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முழு மூச்சான போரை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இதன் இன்னொரு வெளிப்பாடாக, இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை குறிவைத்துத் தாக்கி கொன்று வருகிறது.
இந்தியா மட்டுமே அண்டை நாடு என்றிருக்கும் நிலையில், தேவையே இல்லாத நிலையில், சுப்பர் சொனிக் மிக் போர் விமானங்களை அண்மையில் இலங்கை வாங்கியிருப்பதாக அறிகிறோம்.
யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு, இப்போது ஏறக்குறைய தமிழ் மக்களே இல்லாத வெற்றிடம் ஆக்கப்பட்டுவிட்டது. கருகிய மனித உடல்கள், எரிக்கப்பட்ட பயிர்கள், தாவரங்கள், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், குண்டுகள் விழுந்ததால் ஏற்பட்ட குழிகள், இடிபாடுகள், சாலைப் பள்ளங்கள் ஆகியவைதான், 5 ஆயிரம் ஆண்டுக் கால தமிழ் மொழி, பண்பாட்டின் சின்னமாக விளங்கிய யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இன்று எஞ்சியிருப்பவை. இது ஓர் எடுத்துக்காட்டுதான்.
தங்களின் இயற்கையான, மரபான சூழலில் தமிழ் மக்கள் செழித்து வாழ்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகியவையும் இப்போது சாவும், அழிவும் மிகுந்த பகுதிகளாகிவிட்டன.
8 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் இலங்கையில் இருந்து வந்த ஒரு லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர்.
இலங்கை அரசின் தூண்டுதலால், அரசியல் உள்நோக்கத்துடன் மனித உரிமைகளை மீறி வருவோர், தொடர்ந்து கொலைகள் செய்வதிலும், ஆட்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியை விரும்பும் அரசியல்வாதிகளைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரை அவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். வெள்ளை நிற வான் ஆட்கடத்தல் என்று அழைக்கப்படும் ஆட்கடத்தல்கள் அரசின் உயர் தலைவர்களின் தூண்டுதலால் நடைபெறுகின்றன.
இனச் சிக்கல் என்ற அரசியல் சிக்கலுக்குப் போர்ப்படை மூலம் தீர்வுகாண முயலும் இலங்கை அரசின் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் ஆகும். தமிழர்களின் தாயகமான 20 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை கைப்பற்ற வேண்டும், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அழிக்க வேண்டும், தமிழர்களை எவரேனும் எஞ்சியிருந்தால் அவர்களை அடிமைப்படுத்த வேண்டும், இலங்கைத் தீவு முழுவதையுமே சிங்களப் பெளத்தர்களின் நாடாக்க வேண்டும் என்பனவே இலங்கை அரசின் கொள்கைத்திட்டங்கள் ஆகும்.
இந்தியாவில் உள்ள 6 கோடி தமிழர்கள், பாக்கு நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் அப்பால், தங்கள் சொந்த சகோதரர்களும், சகோதரிகளும் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு, பொறுத்திருக்க முடியாது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த கடலின் இருபுறத்திலும் வாழும் தமிழர்களுக்கு இடையிலான அன்பும், பாசமும், ஆதரவும் மிகவும் வலுவானவை, ஆழமாக வேரோடியவை.
அன்புள்ள பிரதமர் அவர்களே, எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். வரலாற்றில் அவர்கள் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் வேளையில், அவர்களைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இப்போதே இந்தியா செயலாற்ற வேண்டும். போர் வெறியை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். பேச்சுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு மீண்டும் தொடங்கச் செய்ய வேண்டும். பேச்சு நடைமுறைகளுக்கு ஏதேனும் பங்காற்றும்போது, தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை இந்திய அரசு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அக்டிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை மருத்துவர் இராமதாஸ் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழர்களின் நியாயமான விருப்பங்களுக்கு இடமளிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. தமிழர்களை அடிமைப்படுத்துகிற, அழித்தொழிக்கிற திட்டத்தை மிகத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.
இந்தியாவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன ஒப்பந்தம் இப்போது உயிரற்றுப் போய்விட்டது. நோர்வே நாட்டின் அமைதி முயற்சியில் உருவான போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த 2002 ஆம் ஆண்டின் ரணில் விக்கிரமசிங்க - பிரபாகரன் ஒப்பந்தம், இலங்கை அரசால் இப்போது குப்பைக் கூடையில் போடப்பட்டுள்ளது.
இந்த வகையில் இலங்கை அரசு வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசாகிவிட்டது. அராஜக காட்டாட்சியாகி விட்டது. மனிதகுலத்துக்கே அது வெட்கக்கேடாகி விட்டது. தன் சொந்தத் தமிழ்க் குடிமக்களையே மிரட்டி நடுங்க வைக்கும் அரசாகி விட்டது.
இந்தப் போர்வெறி நோக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கிக் குவித்து வருகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்தான் இப்போது அந்நாட்டின் தூதுவராகக் கொழும்பில் இருக்கிறார். தன் போர்ப்படை நோக்கங்களுக்காக, இலங்கையில் காலூன்றுவதற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு நாடு சீனா. இலங்கைக்கு சீனாவின் ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் என்ற போர்வையில், இலங்கைக்கு ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும், இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சியையும் அமெரிக்கா அளித்து வருகிறது. இலங்கையின் இந்த ஆயுதத் தொகுப்புக்கு, இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி வருவதாக நாங்கள் அறிகிறோம்.
இந்த ஆயுதங்களை பயன்படுத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முழு மூச்சான போரை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இதன் இன்னொரு வெளிப்பாடாக, இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை குறிவைத்துத் தாக்கி கொன்று வருகிறது.
இந்தியா மட்டுமே அண்டை நாடு என்றிருக்கும் நிலையில், தேவையே இல்லாத நிலையில், சுப்பர் சொனிக் மிக் போர் விமானங்களை அண்மையில் இலங்கை வாங்கியிருப்பதாக அறிகிறோம்.
யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு, இப்போது ஏறக்குறைய தமிழ் மக்களே இல்லாத வெற்றிடம் ஆக்கப்பட்டுவிட்டது. கருகிய மனித உடல்கள், எரிக்கப்பட்ட பயிர்கள், தாவரங்கள், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், குண்டுகள் விழுந்ததால் ஏற்பட்ட குழிகள், இடிபாடுகள், சாலைப் பள்ளங்கள் ஆகியவைதான், 5 ஆயிரம் ஆண்டுக் கால தமிழ் மொழி, பண்பாட்டின் சின்னமாக விளங்கிய யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இன்று எஞ்சியிருப்பவை. இது ஓர் எடுத்துக்காட்டுதான்.
தங்களின் இயற்கையான, மரபான சூழலில் தமிழ் மக்கள் செழித்து வாழ்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகியவையும் இப்போது சாவும், அழிவும் மிகுந்த பகுதிகளாகிவிட்டன.
8 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் இலங்கையில் இருந்து வந்த ஒரு லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர்.
இலங்கை அரசின் தூண்டுதலால், அரசியல் உள்நோக்கத்துடன் மனித உரிமைகளை மீறி வருவோர், தொடர்ந்து கொலைகள் செய்வதிலும், ஆட்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியை விரும்பும் அரசியல்வாதிகளைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரை அவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். வெள்ளை நிற வான் ஆட்கடத்தல் என்று அழைக்கப்படும் ஆட்கடத்தல்கள் அரசின் உயர் தலைவர்களின் தூண்டுதலால் நடைபெறுகின்றன.
இனச் சிக்கல் என்ற அரசியல் சிக்கலுக்குப் போர்ப்படை மூலம் தீர்வுகாண முயலும் இலங்கை அரசின் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் ஆகும். தமிழர்களின் தாயகமான 20 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை கைப்பற்ற வேண்டும், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அழிக்க வேண்டும், தமிழர்களை எவரேனும் எஞ்சியிருந்தால் அவர்களை அடிமைப்படுத்த வேண்டும், இலங்கைத் தீவு முழுவதையுமே சிங்களப் பெளத்தர்களின் நாடாக்க வேண்டும் என்பனவே இலங்கை அரசின் கொள்கைத்திட்டங்கள் ஆகும்.
இந்தியாவில் உள்ள 6 கோடி தமிழர்கள், பாக்கு நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் அப்பால், தங்கள் சொந்த சகோதரர்களும், சகோதரிகளும் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு, பொறுத்திருக்க முடியாது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த கடலின் இருபுறத்திலும் வாழும் தமிழர்களுக்கு இடையிலான அன்பும், பாசமும், ஆதரவும் மிகவும் வலுவானவை, ஆழமாக வேரோடியவை.
அன்புள்ள பிரதமர் அவர்களே, எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். வரலாற்றில் அவர்கள் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் வேளையில், அவர்களைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இப்போதே இந்தியா செயலாற்ற வேண்டும். போர் வெறியை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். பேச்சுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு மீண்டும் தொடங்கச் செய்ய வேண்டும். பேச்சு நடைமுறைகளுக்கு ஏதேனும் பங்காற்றும்போது, தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை இந்திய அரசு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அக்டிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்
Subscribe to:
Posts (Atom)